வீரப்பனுடன் தொடர்பா? மறுக்கிறார் ராஜ்குமார் மகன்
பெங்களூர்:
எனக்கும் வீரப்பனுக்கும் என்றும் தொடர்பு கிடையாது என ராஜ்குமாரின் மகன் புனித் ராஜ்குமா ர் தெரிவித்துள்ளார்.
ராஜ்குமாரை வீரப்பன் கடத்திய போது, ராஜ்குமாரின் மகன் புனீத் நடத்தி வந்த கிரானைட் குவாரி தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினைகாரணமாக, கடத்தல் நடந்துள்ளதாக கூறப்பட்டது.
இந்த நிலையில், சுரங்கம் மற்றும் புவியியல் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி கனகபுரா பகுதியில் புனித் குமாருக்கு 4.2ஏக்கர் பட்டா நிலத்தில் குவாரி உள்ளது. ஆனால் அது அவர் முன்னோர் பெயரில் இருக்கிறது, முறைப்படி அனுமதி பெற்றுதான்அவர் குவாரி நடத்தி வருகிறார் என தெரிவித்தனர்.
இந் நிலையில் புனித் ராஜ்குமார் பெங்களூரில் இது தொடர்பாக தெரிவிக்கையில், கனகபுராவில் நான் கிரானைட் தொழில் நடத்திவந்தது உண்மைதான். அந்த தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் அதில் ஆர்வம் இல்லாமல் போய்விட்டது.
கனகபுரா குவாரிக்காக 1994-ம் ஆண்டு ரூ 3 லட்சம் முதலீடு செய்தேன். இந்த குவாரியிலிருந்து இரண்டு அல்லது மூன்றுமுறைதான் கடலில் கல் அனுப்பி வைத்தேன். 1997-ம் ஆண்டு இந்த குவாரியை வேறு ஒருவருக்கு விற்று விட்டேன்.
சந்தனக் கடத்தல் வீரப்பனுக்கும் எனக்கும் இதற்கு முன்பும் எந்த தொடர்பும் இல்லை. இப்போதும் எந்த தொடர்பும் இல்லை எனதெரிவித்தார்,












Click it and Unblock the Notifications