யாழ்ப்பாணத்தில் ராணுவத்தை வாபஸ் பெறுக .. புலிகள்

Subscribe to Oneindia Tamil

கொழும்பு:

இலங்கை அரசுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடப்பதற்கு முன்பு, யாழ்ப்பாணம் தீபகற்பத்திலிருந்து ராணுவ வீரர்கள்முற்றிலுமாக விலக்கிக் கொள்ளப்பட வேண்டும் என்று விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல் பிரிவு தலைவர் தணிகாச்சலம்கூறியிருக்கிறார்.

சமீபத்தில், நார்வே அமைதித் தூதுக் குழு, நவம்பர் 1ம் தேதி பிரபாகரனை காட்டில் சென்று சந்தித்தபோது, அவருடன்இருந்தவர்களில் ஒருவர்தான் தணிகாச்சலம்.

பிரபாகரனின் 46-வது பிறந்த நாள், இறந்த புலிகளுக்கு அஞ்சலி ஆகியவை அடங்கிய மாவீரர் வாரத்தை விடுதலைப் புலிகள்கடைப்பிடித்து வருகின்றனர். திங்கள்கிழமை இது முடிவடைகிறது. திங்கள்கிழமை மாலை, விடுதலைப் புலிகளின் ரேடியோவில்,பிரபாகரன் உரை நிகழ்த்துவார். அப்போது, அமைதிப் பேச்சுவார்த்தை தொடர்பாக முக்கிய அறிவிப்பை அவர் வெளியிடலாம்என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தனது பிறந்த நாளையொட்டி, புலிகள் வசம் இருந்த15 கைதிகளை விடுவிக்க பிரபாகரன் உத்தரவிட்டுள்ளார். மேலும், 2 நாள்விடுமுறையும் அவர் அறிவித்துள்ளார்.

இந்த நிலையில், கொழும்பு நகரிலிருந்து வெளியாகும் ஆங்கிலப் பத்திரிகையொன்றுக்கு அளித்த பேட்டியில் தணிகாச்சலம்கூறியிருப்பதாவது:

ராணுவ ஆக்கிரமிப்பு முதலில் யாழ்ப்பாணத்திலிருந்து அகல வேண்டும். அமைதிப் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான சூழ்நிலைஅங்கு உருவாக்கப்பட வேண்டும். ராணுவம் இல்லாத சூழ்நிலையில் மட்டுமே பேச்சுவார்த்தை புலிகள் சம்மதிக்க முடியும்.யாழ்ப்பாணம் மக்கள் மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடைகள் அகற்றப்பட வேண்டும். மக்கள் மனதில் அமைதி என்றவார்த்தை பதிய வேண்டும்.

உண்மை, நியாயம் ஆகியவற்றை மையமாக வைத்து எந்த அமைப்பு சமரச முயற்சியில் ஈடுபட்டாலும் அதை நாங்கள்வரவேற்போம். நார்வே முயற்சியை நாங்கள் நம்பிக்கையுடன்தான் எடுத்துக் கொண்டிருக்கிறோம்.

தெற்காசியாவில் பெரிய நாடு, இந்தியா. எனவே இலங்கைத் தமிழர்களின் நியாயமான இந்த சுதந்திரப் போராட்டத்திற்கு இந்தியாஆதரவு தர வேண்டும். அமைதி மற்றும் கெளரவத்துடன் இலங்கைத் தமிழர்கள் வாழ இந்தியா உதவி புரிய வேண்டும் என்றுகூறியிருந்தார் தணிகாச்சலம்.

இதற்கிடையே, ராணுவத்தை வாபஸ் பெறுவது என்ற பேச்சுக்கே இடமில்லை என்று அதிபர் சந்திரிகா கூறியுள்ளார்.தணிக்சாசலத்தின் பேட்டிக்கு பதிலளிப்பது போல வெளியிட்ட அறிக்கையில், ராணுவம் தொடர்ந்து யாழ் பகுதியில்நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும். அமைதி ஒப்பந்தம் ஏற்படும் வரை இது தொடரும். புலிகளின் கோரிக்கையை ஏற்றுநாங்கள் ஏமாறத் தயாரில்லை என்று அவர் கூறியுள்ளார்.

ஐ.ஏ.என்.எஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+