அபுதாபி தீவிபத்தில் 3 இந்தியர்கள் பலி
துபாய்:
அபுதாபியிலுள்ள ஒரு எண்ணெய்க் கிணற்றில் உள்ள மின் உற்பத்தி நிலையத்தில் வேலை செய்து கொண்டிருந்த 3 இந்தியர்கள் அங்கு ஏற்பட்ட விபத்தில்இறந்தனர். 2 பேர் படு காயமடைந்தனர்.
கடந்த சனிக்கிழமை இரவு 8.30 மணிக்கு தாஸ் தீவிலுள்ள உம் அல் ஷீப் எண்ணெய்க் கிணற்றில் விபத்து ஏற்பட்டது. இறந்தவர்கள் மூன்று பேரும்இந்தியர்கள். அவர்கள் பெயர் ஜேக்கப் ஜான், பிரதீப் குமார், நவ்ஷத் என்று அடையாளம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. காயமடைந்தவர்களில் ஒருவர்இந்தியராக இருக்கலாம் என்று தெரிகிறது. இன்னொருவர் குறித்த அடையாளம் தெரியவில்லை.
இறந்த மூன்று பேரும் தேசிய பெட்ரோலியக் கட்டுமான நிறுவனத்திற்காக காண்டிராக்டில் வேலை பார்த்து வந்தவர்கள். காயமடைந்த இருவரும்ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டனர். விபத்துக்கான காரணம் தெரியவில்லை. இருப்பினும் தற்செயலா சம்பவமாகவேஇதை போலீஸார் கருதுகின்றனர்.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications