காஷ்மீர் சண்டை நிறுத்தம்: ஜெயேந்திரர் வரவேற்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

ரம்ஜானையொட்டி காஷ்மீரில் சண்டை நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளதை வரவேற்கிறேன் என்று காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதிசுவாமிகள் கூறியுள்ளார்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கும் காஞ்சி காமகோடி அறக்கட்டளை மருத்துவமனை உள்ளது. இங்கு, குழந்தைகளுக்கானஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதைத் தொடங்கி வைத்து ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பேசியதாவது:

அயோத்தியில் ராமர் கோவில் கட்டலாம். முஸ்லீம்கள் விரும்பினார் அதன் பக்கத்தில் மசூதியும் கட்டலாம். பாபர் மசூதி இடிக்கப்பட்டது வருத்தமானவிஷயமாகும். இது தொடர்பாக மத்திய அமைச்சர்கள் ராஜினாமா செய்ய வேண்டும் என்ற அவசியமில்லை.

ரம்ஜானையொட்டி, காஷ்மீரில் சண்டை நிறுத்தம் செய்யப்படும் என்று வாஜ்பாய் அறிவித்துள்ளார். இதை நான் வரவேற்கிறேன். காஷ்மீரில் நிரந்தர சண்டைநிறுத்தம் ஏற்பட வேண்டும் என்பதே என் விருப்பம். காஷ்மீரில் உள்ளவர்கள் இந்துக்களானாலும், முஸ்லீம்களானாலும் அவர்கள் இந்தியர்கள். அங்குதீவிரவாதம் தலைதூக்காமல் தடுக்க மத்திய அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும்.

சந்தனக்கடத்தல் வீரப்பனுக்குப் பொதுமன்னிப்பு வழங்க வேண்டும் என்று கூறுகிறார்கள். இதுகுறித்து கோர்ட்தான் முடிவு செய்ய வேண்டும் என்றார்ஜெயேந்திர சுவாமிகள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+