For Daily Alerts
Just In
கோவையில் பைக்-லாரி மோதலில் 2 பேர் பலி
கோவை:
கோவை அருகே லாரி மோதியதில் பைக்கில் பயணம் செய்த இரு வாலிபர்கள் இறந்தனர்.
கோவை ரங்கே கவுடர் வீதியைச் சேர்ந்த நாராயணசாமி என்பவரது மகன் சங்கர் (20). இதே பகுதியைச் சேர்ந்த அப்துல் பஷீர் என்பவரது மகன் சமீர் (19).இருவரும் நண்பர்கள்.
இவர்கள் விடுமுறை நாளான ஞாயிறன்று ஆனைகட்டிக்கு மோட்டார் பைக்கில் சென்றனர். பின்னர் கோவை திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது செங்கல்லாரி ஒன்று இவர்கள் பைக் மீது மோதியது. இந்த விபத்தில் சங்கர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரும் வழியில் சமீர் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்துவருகின்றனர்.
Comments
Story first published: Monday, November 27, 2000, 5:30 [IST]