புதுவையில் 2001ல் பாமக ஆட்சியே
பாண்டிச்சேரி:
2001 ம் வருடம் பாண்டிச்சேரியில் பாட்டாளி மக்கள் கட்சியின் ஆட்சியே அமையும் என்று கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஞாயிற்றுக்கிழமைதெரிவித்தார்.
பா.ம.க.யின் புதுவை லாஸ்பேட்டை தொகுதி மாநாடு லாஸ்பேட்டை கல்லூரி சாலையில் நடந்தது.
மாநாட்டில் கலந்து கொண்டு ராமதாஸ் பேசியதாவது:
புதுவை மாநிலத்தில் பல பிரச்சனைகள் உள்ளன. இங்கே நல்லாட்சியே இல்லை எனக் கூறலாம். மக்கள் குறை தீர்க்கும் ஆட்சி அமைய நாங்கள்பாடுபட்டு வருகிறோம்.
வன்முறையில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு எப்போதும் நம்பிக்கை கிடையாது. தமிழகம் மற்றும் புதுவை மாநிலங்களில் வருங்காலத்தில் ஒரு துளி ரத்தம் கூடசிந்தக் கூடாது. வன்முறையில் பாமக வினர் ஈடுபட்டால் அவர்கள் மீது நானே நடவடிக்கை எடுப்பேன்.
மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு ஆந்திரா, கேரளா, தமிழகத்தில் இடஒதுக்கீடு உள்ளது. ஆனால் புதுவையில் இல்லை. இடஒதுக்கீடு கோரி நாங்கள் பலமுறை போராடியுள்ளோம்.
புதுவையில் சில ஓநாய்கள் ஆட்டை மோதவிட்டு ரத்தம் குடிக்க நினைக்கிறது. ஆனால் நாங்கள் விழிப்பாக உள்ளோம்.
போலீஸாருக்கு டெல்லிக்கு இணையான சம்பளம் கிடைக்க நானே புதுவையில் ஊர்வலம் நடத்தினேன். புதுவை அரசியல்வாதிகள் தீமைதரும்தொழிற்சாலைகளை புதுவையில் அமைக்க அனுமதி அளித்துள்ளனர். இந்த தொழிற்சாலைகளினால் மண், நீர் மற்றும் காற்று போன்றவை மாசடைந்துவருகிறது என்றார் ராமதாஸ்.