நாக்பூர் டெஸட்: வலுவான நிலையில் இந்தியா
நாக்பூர்:
இந்திய - ஜிம்பாப்வே அணிகளுக்கிடையேயான இரண்டாவது கிரிக்கெட்டின்நான்காவது நாளான செவ்வாய்கிழமையன்று ஜிம்பாப்வே இந்தியாவின் பந்துவீச்சிற்கு தாக்கு பிடிக்க முடியாமல் ஃபாலோ ஆனுக்குத் தள்ளப்பட்டது.
இந்தியா முதல் இன்னிங்சில் 6 விக்கெட் இழப்பிற்கு 609 ரன் எடுத்தது. இதில்டெண்டுல்கர் இரட்டைச் சதம் அடித்து ஆட்டம் இழக்காமல் இருந்தார்.
400 ரன் எடுத்தால் ஃபாலோ ஆனை தவிர்கலாம் என்ற நிலையில் விளையாடத்தொடங்கிய ஜிம்பாப்வே மூன்றாவது நாளான திங்கள்கிழமையன்று 359 ரன்களுக்கு 6விக்கெட்டுகளை இழந்திருந்தது.
மேலும் 51 ரன்கள் எடுத்தால் ஃபாலோ ஆனை தவிர்க்கலாம் என 4-வது நாள்ஆட்டத்தை தொடர்ந்து விளையாடியது.ஆனால் 382 ரன்களுக்கு அனைத்துவிக்கெட்டுகளையும் இழந்து ஃபாலோ ஆன் பெற்றது.
இந்தியத் தரப்பில் ஸ்ரீநாத் 81 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.ஜாகீர் கான் 78ரன்கள் கொடுத்து 1 விக்கெட் கைப்பற்றினார். சுனில் ஜோஷி 69 ரன்கள்கொடுத்து 1 விக்கெட் கைப்பற்றினார்.
அஜித் அகார்கர் 59 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகள் கைப்பற்றினார். எஸ் சிங் 70ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.
இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்து ஆடிய ஜிம்பாப்வே 4-வது நாளானசெவ்வாய்கிழமை ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 238 ரன்கள்எடுத்துள்ளது.காம்ப்பெல் 83 ரன்னுடனும், ஆன்டி பிளாவர் 88 ரன்களும் எடுத்துஆட்டமிழக்காமல் இருக்கின்றனர்.
இந்திய தரப்பில் எஸ்.சிங் இரண்டாவது இன்னிங்சில் 3 விக்கெட்டுகளை எஸ். சிங்கைப்பற்றியுள்ளார்.
இரண்டு இன்னிங்சின் மொத்த ரன்களையும் கூட்டினால் கூட ஜிம்பாப்வே இந்தியாவைவிட 11 ரன்னே அதிகம் பெற்றுள்ளது.
ஆட்டத்தின் இறுதி நாள் புதன் கிழமை நடைபெறும். ஜிம்பாப்வே அணியை குறைந்தரன்களுக்கு ஆட்டமிழக்கச் செய்து இந்தியா வெற்றி பெற முயற்சி செய்யும். ஆனால்ஜிம்பாப்வே அணியினர் நிதானித்து ஆடி ஆட்டத்தை டிரா செய்யவாவது முயல்வர்.