For Daily Alerts
Just In
அயோத்தி: முஸ்லீம் லீக் அமைதிப் போராட்டம்
சென்னை:
பாபர் மசூதி இடிக்கப்பட்ட தினமான டிசம்பர் 6 ம் தேதி அமைதியான முறையில் போராட்டம் நடைபெறும் என தமிழக முஸ்லிம் லீக் திங்கள்கிழமைஅறிவித்துள்ளது.
இது குறித்து தமிழக முஸ்லிம் லீக்கின் மாநிலத் தலைவர் ஷேக்தாவூத் நிருபர்களுக்கு அளித்துள்ள பேட்டி விவரம்:
ரம்ஜான் மாதத்தில் தீவிரவாதிகள் காஷ்மீரில் போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என பிரதமர் கூறியுள்ளதை வரவேற்கிறோம். இதை சில தீவிரவாதஇயக்கங்கள் மறுத்து வருகின்றன.
அவர்களை காஷ்மீர் மக்கள் புறக்கணிக்க வேண்டும். காஷ்மீரை இந்தியாவின் ஒரு பகுதியாக ஏற்காதவர்களை நாங்கள் எதிர்க்கிறோம்.
பாபர் மசூதி இடிக்கப்பட்ட தினமான டிசம்பர் மாதம் 6- ம் தேதி அமைதியான முறையில் சென்னை விருந்தினர் மாளிகை முன்பு மவுனப் போராட்டம்நடத்த விருக்கிறோம் என்று தனது பேட்டியில் கூறினார் ஷேக் தாவூத்.
Story first published: Tuesday, November 28, 2000, 5:30 [IST]