For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வீரப்பனுக்கு உணவு செல்லும் பாதைகள் அடைப்பு

By Staff
Google Oneindia Tamil News

ஈரோடு:

சந்தன கடத்தல் வீரப்ப னுக்கு உணவு கொண்டு செல்லப்படும் பாதைகள் எனக் கருதப்படும் வழிகள் அனைத்தும்அடைக்கப்பட்டுள்ளன.

சந்தன கடத்தல் வீரப்பனை பிடிக்க அதிரடிப்படையினர் மும்முரமாகியுள்ளனர்.

தமிழ்நாடு - கர்நாடக மாநிலங்களைச்சேர்ந்த 1,320 போலீஸார் வீரப்பனை பிடிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.அவர்கள் சிறு சிறு குழுக்களாக பிரிக்கப்பட்டு, வீரப்பன் ஒளிந்து இருக்கும் காட்டுக்குள் அனுப்பப்பட்டுள்ளனர்.

அடர்ந்த காட்டுப்பகுதியில் வீரப்பன் எங்கெல்லாம் தங்கியிருப்பான் என்பது வரைபடம் மூலம் விளக்கப்பட்டு, அதன்அடிப்படையில் தேடுதல் வேட்டை நடக்கிறது. தற்பொழுது சத்தியமங்கலம், பண்ணாரி, தாளவாடி காட்டுப் பகுதியில் கடும்குளிரும் பனியும் இருப்பதால் வீரப்பன் ஏதாவது குகைக்குள் அடைக்கலமாகியிருப்பான் என்று கருதப்படுகிறது.

எனவே நவீன கருவிகளைப் பயன்படுத்தி தேடுதல் வேட்டை நடக்கிறது. இதற்கிடையே அவன் கர்நாடகக் காட்டுப்பகுதிக்கு தப்பிஒடியிருப்பான் என்ற சந்தேகமும் அதிரடிப்படையினருக்கு ஏற்பட்டுள்ளது.

அதற்கேற்ப அதிரடிப்படையினர் தங்களது திட்டங்களை மாற்றி அமைத்துள்ளனர். வீரப்பன் அடிக்கடி நடமாடும் பகுதிகளில்ஊடுருவ வசதியாக, அவனிடம் பணயக்கைதிகளாக இருந்த கோவிந்தராஜூவிடம் அதிரடிப்படையினர் ஆலோசனைகேட்டுள்ளனர்.

தேவைப்பட்டால் அடர்ந்த காட்டுப்பகுதிக்குள் கோவிந்தராஜூவை அழைத்துச்செல்லவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இவைதவிர காடு, மலைகளில் நன்கு பயிற்சி பெற்ற ராணுவ கமெண்டோக்களை உதவிக்கு அழைக்கவும் தமிழ்நாடு- கர்நிாடக அரசுகள்மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளன.

அதை ஏற்று கமாண்டோ படையை மத்திய அரசு அனுப்புவது குறித்து தீவிரமாக யோசித்து வருகின்றது.

இந்த நிலையில், வீரப்பனை தனிமைபடுத்தவும், அவனை உணவு இல்லாமல் தவிக்க விடவும் அதிரடிப் படையினர் முடிவுசெய்துள்ளனர். அதற்கான நடவடிக்கைகளிலும் இறங்கிவிட்டனர்.

வீரப்பன் ஒதுங்கியிருக்கும் காட்டுப் பகுதிகளில் வாழும் மலைவாழ் மக்களில் 90 சதவீதம் பேர் அவனுக்கு ஆதரவாகஇருக்கின்றனர். இதனால் உணவு உட்பட பல பொருட்கள் தங்கு தடையின்றி கிடைப்பதால் அதைத் தடுத்து நிறுத்தும்முயற்சிகளில் இறங்கியுள்ளது அதிரடிப்படை.

ராஜ்குமாருடன் சேர்த்து கடத்தப்பட்ட கோவிந்தராஜூ 2 தினங்களுக்கு முன் தாங்கள் கடத்தப்பட்ட தொட்டகாஜனூர் பண்ணைவீட்டுக்குச் சென்று வந்தார். அவரிடம் வீரப்பனின் பதுங்குமிடங்கள் குறித்து அதிரடிப்படையினர் கேட்டு அறிந்ததாகத்தெரிகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X