ஆசிய கோப்பை டென்னிஸ்: பயஸ், பூபதி பங்கேற்பு
டெல்லி:
ஆசிய கோப்பை டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் சார்பாக லியாண்டர் பயசும், மகேஷ் பூபதியும் கலந்து கொள்கின்றனர்.
டெல்லியிலுள்ள லான் டென்னிஸ் கழகம் நான்காவது ஆண்டாக ஏ.டி.எஃப் என்றழைக்கப்படும் ஆசிய கோப்பை தொடரை நடத்தவிருக்கிறது.
இந்தப்போட்டிகள் வரும் டிசம்பர் மாதம் 19-ம் தேதி முதல் 24-ம் தேதிவரை நடக்கவுள்ளன. இந்த ஆண்டு முதல் பெண்கள் பிரிவு போட்டியும்நடக்கவுள்ளது.
இந்தப் போட்டியின் மொத்த பரிசுத் தொகை 90 ஆயிரம் அமெரிக்க டாலர்களாகும். இந்தப் போட்டியில் ஆசியாவின் தலைசிறந்த 4 அணிகள் போட்டியிடும்.
ஆண்கள் பிரிவில் இந்தியா, கொரியா, தாய்லாந்து, உஸ்பெகிஸ்தான் அணிகளும், பெண்கள் பிரிவில் சீனா, இந்தோனேஷியா, தாய்லாந்து மற்றும் இந்தியஅணியும் மோதுகின்றன.
இந்திய அணியின் சார்பில் ஆண்கள் பிரிவில் லியாணடர் பயசும், மகேஷ் பூபதியும் விளையாடுகின்றனர். பெண்கள் பிரிவு இறுதிப் போட்டி டிசம்பர் மாதம்23-ம் தேதியும், ஆண்கள் பிரிவு இறுதிப் போட்டி டிசம்பர் மாதம் 24-ம் தேதியும் நடைபெறும்.