தமிழகத்தை நாளை காலை புயல் தாக்கும்
சென்னை:
வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள புயல் சின்னம் புதன்கிழமை காலை தமிழகம்- ஆந்திர எல்லையில் கரையைக்கடக்க உள்ளது.
புதன்கிழமை காரைக்காலில் இருந்து 450 கி.மீ. தொலைவில் மையம் கொண்டிருந்த இந்த புயல் சின்னம் வடமேற்காக நகர்ந்து வருகிறது.
வியாழக்கிழைமை இது ஆந்திர மாநிலத்தின் ஓங்கோல், தமிழகத்தின் கூடலூர் இடையே கரையைக் கடக்கும் எனத்தெரிகிறது.
இதனால் சென்னை, திருவள்ளூர், கடலூர், நாகப்பட்டிணம், தஞ்சாபூர், திருச்சி. புதுக்கோட்டை ஆகியமாவட்டங்களில் பலத்த மழை பெய்யும்.
இதையடுத்து அவசர காலப் பணிகளை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது. கடும் மழை, காற்றினால் ஏற்படும்சேதத்தை எதிர் கொள்ள அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டுள்ளது.
ஆந்திராவில்....
இதே போல ஆந்திராவில் கூடலூர், நெல்லூர், குண்டூர், கிருஷ்ணா மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும். இந்தமாவட்டங்களின் கடற்கரைப் பகுதிகளில் 80 முதல் 90 கி.மீ. வேகத்தில் புயல் காற்று வீசும். இதனால், மீனவர்கள்கடலுக்குள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
இந்த மாவட்டங்களில் அனைத்து முன் எச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications