தமிழக புயல்: சமாளிக்க ராணுவ உதவி
சென்னை:
தமிழகத்தில் புதன்கிழமை புயல் கரையைக் கடப்பதால் ஏற்படும் சேதங்களை சமாளிக்க ராணுவத்தின் உதவியைநாடியுள்ளதாக வருவாய்த்துறை அமைச்சர் ரகுமான்கான் தெரிவித்தார்.
வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த தாழ்வழுத்த மண்டலம் காரணமாக தமிழ்நாட்டில் கடலூர் மாட்டத்தில்புதன்கிழமை பிற்பகல் புயல் கரையைக் கடக்கும் என்று தெரிய வந்துள்ளது.
இதையடுத்து தமிழகத்தின் வடக்குப் பகுதியான கடலூரில் ஏற்பட்டுள்ள கடும் மழையைச் சமாளிக்கவும், நிவாரணநடவடிக்கைகளுக்காகவும் ராணவத்தின் உதவியை நாடியுள்ளது தமிழகம்.
வானிலை ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில், புதன்கிழமை பிற்பகல் புயல் கரையைக் கடப்பதால் நாகப்பட்டினம்,சென்னை, கடலூர் மற்றும் தமிழகத்தின் வட மாவட்டங்கள், பாண்டிச்சேரி ஆகிய இடங்களில் கடும் மழை ஏற்படும்என்று எச்சரித்துள்ளனர்.
அமைச்சர் பேட்டி:
தமிழக வருவாய்த்துறை அமைச்சர் ரகுமான்கான், தலைமைச் செயலகத்தில் இதுகுறித்து நிருபர்களிடம் கூறுகையில்,புயல் கரையைக் கடக்கும் போது, தமிழகத்தின் வடக்குக் கடலோர மாவட்டங்களில் மணிக்கு 170 கிலோ மீட்டர்வேகத்தில் சூறாவளி காற்று வீசும்.
இதனால் தமிழகத்தின் வட மாவட்டங்களான விழுப்புரம், திருவள்ளூர், விழுப்புரம், கடலூர், திருவாரூர், தஞ்சை,புதுக்கோட்டை பகுதிகளில் கடும் மழை பெய்யும் என்று தெரிகிறது.
புயல் கரையைக் கடக்கும் நேரத்தில் தொலைபேசி, மின்கம்பங்கள் வேரோடு சாயும் அபாயம் உள்ளது. குடிசைகள்,பலவீனமான கட்டிடங்கள் இடிந்து விழும் அபாயம் உள்ளது.
ராணுவ உதவி:
புயலினாலும், கடும் மழையினாலும் தவிர்க்க முடியாத அளவில் சேதம் ஏற்பட்டால் நிவாரண உதவிக்காக ராணுவஉதவியைக் கேட்டுள்ளோம்.
புயலால் அபாயம் ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டக் கலெக்டர்களுடன் தொடர்ந்து தொடர்புகொண்டு வருகிறோம். திடீரென்று ஏற்படும் அபாயத்தைச் சமாளிக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மரக்காணம் பகுதியில் மிகவும் தாழ்வான பகுதியில் வாழ்ந்து வரும் 350 க்கும் மேற்பட்ட பொதுமக்கள்பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
புயல் நிவாரண மையங்கள்:
தமிழக அரசு, இதுவரை 150 புயல் நிவாரண மையங்களை அமைத்துள்ளது. இதுவரை அவர்களுக்கு சூறாவளிக்காற்றாலும், புயலாலும் உயிர்ச்சேதமோ அல்லது பொருட்சேதமோ ஏற்பட்டதாகத் தகவல்கள் வரவில்லை என்றார்.
கடலூரில் கனமழை:
இதற்கிடையே, கடலூர் மாவட்டத்தில் 100 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளிக் காற்று வீசியதாகவும், பிற்பகல்முதல் கடும் மழை பெய்து வருவதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.
மாவட்டக் கலெக்டர் சந்தீப் சக்சேனா, தாழ்வான பகுதிகளில் வசித்து வரும் 100 க்கும் மேற்பட்ட குடும்பங்களைபாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைத்துள்ளார். சேதம் ஏற்படும் பகுதிகளைத் தீவிரமாகக் கண்காணிக்கும்படிஅதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
கடலூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு புதன்கிழமை விடுமுறை விடப்பட்டுள்ளது.
யு.என்.ஐ.
இன்று கடலைக் கடக்கிறது புயல்: சென்னையில் மழை