தேர்தல் கூட்டணி குறித்து மூப்பனார் ஆலோசனை
சென்னை:
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் மூப்பனார் புதன்கிழமை சத்யமூர்த்தி பவனில் மாவட்டத் தலைவர்களுடன் வரும்சட்டசபைத் தேர்தலில் யாருடன் கூட்டணி வைத்துக் கொள்வது என்பது குறித்து ஆலோசனை நடத்தினார்.
மூப்பனார் கடந்த 2 நாட்களுக்குப் முன்பு டெல்லி சென்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியைச் சந்தித்தார்.அங்கு அவர் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பலரையும் சந்தித்துப் பேசினார்.
பின்னர் சென்னை திரும்பியதும் மூப்பனார், புதன்கிழமை மாவட்டத் தலைவர்களுடன் தேர்தல் கூட்டணி குறித்துஆலோசனை நடத்தினார்.
தேர்தல் கூட்டணி, டிசம்பர் மாதம் நடக்கும் மாநில தலைவர் தேர்தல் போன்றவை குறித்து அவர் மாவட்டதலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
கட்சித் தேர்தலை முறைகேடுகள் எதுவுமின்றி மிகவும் அமைதியான முறையில் நடத்த வேண்டும் என்றும்மூப்பனார் ஆலோசனை வழங்கினார்.
முன்னாள் மத்திய அமைச்சர்கள் தனுஷ்கோடி ஆதித்தன், எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம், எதிர்க்கட்சித் தலைவர்சோ.பாலகிருஷ்ணன் உள்பட பலர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications