அணை விவகாரம்: நாடாளுமன்றத்தில் தமிழகம்-கேரளம் மோதல்
டெல்லி:
நாடாளுமன்றத்தில் புதன்கிழமை முல்லைப்பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக தமிழக, கேரள எம்.பி.க்களிடையே பெரும் வாக்குவாதம்ஏற்பட்டது.
நாடாளுமன்றத்தில் கேள்வி நேரம் முடிந்த பின், கேரள எம்.பி.பிரான்சிஸ் ஜார்ஜ் முல்லைப்பெரியாறு அணை விவகாரம் குறித்து பேசினார்.
அவர் பேசுகையில், தமிழக அரசு, முல்லைப்பெரியாறு அணையின் உயரத்தை 136 அடியிலிருந்து 152 அடியாக உயர்த்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளது.
அணையின் உயரத்தை அதிகரித்தால் கேரள மாநிலத்தில் இடுக்கி, கோட்டயம், எர்ணாகுளம் ஆகிய மூன்று பெரிய மாவட்டங்கள் பெரும் பிரச்சனையைச்சந்திக்க நேரிடும் அபாயம் உள்ளது.
நீர்ப்பாசன வசதித் திட்டங்களுக்காக அணையின் உயரத்தை 152 அடி உயரமாக உயர்த்த வேண்டும் என்று தமிழக அரசு வற்புறுத்தி வருகிறது. இதையடுத்துஇது ஒரு பூதாகரமான பிரச்சனையாகி விட்டது.
அணையின் உயரத்தை அதிகரித்தால் மழை காலங்களில் கேரளாவின் மத்திய மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்படும்.
சுற்றுலாப் பயணிகளை மிகவும் கவர்வது தேக்கடி ஏரி. இது பெரியாறு அணை அருகே உள்ளது. இதனால் அணையின் உயரத்தை அதிகரித்தால் இங்குள்ளமிருகக்காட்சி சாலை நீரில் மூழ்கும்.
முல்லைப்பெரியாறு அணை கட்டி 104 வருடங்கள் ஆகிறது. அதன் உயரம் அதிகரிக்கப்பட்டால் கண்டிப்பாக அணை மிகுந்த சேதமடையும். மேலும் 50கிலோமீட்டர் தொலைவில் உள்ள இடுக்கியில் உள்ள அணையும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.
முல்லைப்பெரியாறு அணை விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க இரு மாநிலங்களும் சுப்ரீம் கோர்ட்டை அணுகின. சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி, மத்தியஅரசு, தமிழக மற்றும் கேரள முதல்வர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் கொண்ட கூட்டத்தைக் கூட்டியது.
இது குறித்து விவாதிக்க 7 உறுப்பினர்கள் கொண்ட குழுவை மத்திய அரசு அமைத்தது. அதில் ஒரு உறுப்பினர் மட்டுமே கேரளாவைச் சேர்ந்தவர். 6 பேர்மத்திய நீர் வளப் பாதுகாப்புத் துறையைச் சேர்ந்தவர்கள். சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி கேரளாவிலிருந்து 3 உறுப்பினர்கள் இக்குழுவில் இடம்பெறவேண்டும்.
முல்லைப்பெரியாறு அணை குறித்து விவாதிப்பதற்காக மீண்டும் இரு மாநில முதல்வர்கள், அதிகாரிகள் கூட்டத்தை மத்திய அரசு கூட்ட வேண்டும் என்றுவலியுறுத்தார் ஜார்ஜ்.
தமிழக எம்.பி.வைகோ ஆட்சேபணை:
கேரள எம்.பி.ஜார்ஜின் பேச்சுக்கு மதிமுக தலைவர் வைகோ ஆட்சேபணை தெரிவித்தார். இதையடுத்து இரு மாநில எம்.பி.க்களுக்கும் கட்சி வித்தியாசம்இன்றி தங்களது மாநிலங்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தனர். சிறிது நேரம் கடும் வாக்குவாதம் நடந்தது.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications