விமானப் படை தாக்குதலில் 9 கடல் புலிகள் பலி

Subscribe to Oneindia Tamil

கொழும்பு:

இலங்கை விமானப் படையினர் வியாழக்கிழமை நடத்திய தாக்குதலில் 9 விடுதலைப் புலிகள் இறந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து ராணுவ செய்தித் தொடர்பாளர் சனத் கருணாரத்னே நிருபர்களிடம் கூறுகையில், வடக்கு யாழ்ப்பாணம் அருகேயுள்ள பலாய் பகுதியில் கடற் புலிகள் மீதுஇலங்கை விமானப் படையினர் தாக்குதல் நடத்தினர்.

முன்னதாக வியாழக்கிழமை ராணுவ வீரர்கள் சென்று கொண்டிருந்த பஸ்சை, விடுதலைப் புலிகள் கண்ணி வெடி வைத்துத் தகர்த்தனர். இச்சம்பவத்தில் இறந்தராணுவ வீரர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது என்று தலைநகர் கொழும்பில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் நிபந்தனையற்ற பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக அறிவித்தும், புலிகளுக்கும், ராணுவ வீரர்களுக்கும்இடையே தொடர்ந்து போர் நடந்து வருகிறது. இதில் இருதரப்பிலும் பலர் கொல்லப்பட்டு வருகின்றனர்.

அதிபர் சந்திரிகா குமாரதுங்கா, அமைதிப் பேச்சுவார்த்தை குறித்தான ஒப்பந்தம் கையெழுத்தாகும் வரை ராணுவ வீரர்கள் தங்கள் தாக்குதலை நிறுத்தமாட்டார்கள் என்று திட்டவட்டமாக அறிவித்ததைத் தொடர்ந்து பிரபாகரன் தனது பிடிவாதத்தைத் தளர்த்திக் கொண்டு நிபந்தனையற்றபேச்சுவார்த்தைக்குத் தயாராக இருப்பதாக அறிவித்தார்.

இலங்கையில் 1983 ம் வருடம் முதல் தனி ஈழம் கேட்டுப் போராடி வரும் விடுதலைப் புலிகளுக்கும், ராணுவ வீரர்களுக்கும் இடையே போர் நடந்துவருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+