வீரப்பனிடமிருந்து தப்பியவர் நீதிமன்றத்தில் வாக்குமூலம்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்:

சந்தனமரக் கடத்தல் வீரப்பனால், கன்னட நடிகர் ராஜ்குமாருடன் கடத்தப்பட்டு, வீரப்பன் பிடியிலிருந்து தப்பி வந்த நாகப்பா வியாழக்கிழமை பெங்களூர்உயர் நீதிமன்றத்தில் ஆஜரானார்.

கன்னட நடிகர் ராஜ்குமார் உட்பட 4 பேர் வீரப்பனால் கடத்தப்பட்டனர். கடத்தப்பட்டு 61 நாட்களுக்கு பிறகு உதவி டைரக்டர் நாகப்பா வீரப்பனிடமிருந்துதப்பி வந்து விட்டார்.

தான் தப்பி வந்தது குறித்து அவர் முன்னுக்கு பின் முரணான தகவல்களை தெரிவித்து வந்தார். இதனால் நாகப்பா நீதிமன்றத்தில் ஆஜராகி உண்மையானதகவல்களை தெரிவிக்க வேண்டும் என வயிற்று கட்சியை சேர்ந்த ரங்கசாமி ரிட் மனு தாக்கல் செய்திருந்தார்.

நாகப்பாவுக்கு பெங்களூர் உயர் நீதிமன்றம் சம்மன் அனுப்பியும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்து வந்தார். இந்நிலையில் வியாழக்கிழமையன்றுபெங்களூர் உயர் நிதிமன்றத்தில் ஆஜாரானார். அவரிடம் அரை மணி நேரம் விசார ண நடந்தது.

பெங்களூரின் புறப்பகுசியான அம்ருதஹள்ளி பண்ணை வீட்டிலிருந்து பாதுகாப்புடன் நண்பகல் 12.30 மணிக்கு நாகப்பா நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார்.

அவர் நீதிபதி அசோக் பவன் முன்பாக அவர் வாக்கு மூலம் அளித்தார். ராஜ்குமார் குடும்பத்தினர் தன் மீது எந்த விதமான கெடுபிடியும் நடத்தவில்லை,தன்னை தாக்கவும் இல்லை, மிரட்டவும் இல்லை என தெரிவித்தார்.

நாகப்பா வாக்குமூலத்தை நீதபதி அறையில் அளித்ததால் பத்திரிக்கையாளர் எவரும் அனுமதிக்கப்படவில்லை. நாகப்பாவின் வாக்குமூலத்தை பதிவு செய்துகொண்ட நீதிபதி வழக்கு விசாரணையை 14-ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

வயிற்றுக் கட்சி ரங்கசாமி தாக்கல் செய்த ரிட் மனு மீது தான் சொல்ல வேண்டிய ஆட்சேபங்களை டிசம்பர் 14-ம் தேதி நாகப்பா நீதிமன்ற கவனத்திற்குகொண்டு வரலாம் என நீதிபதி தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+