இலங்கை மீனவர்களுக்கு புதிய கடல் பாதை
Subscribe to Oneindia Tamil
கொழும்பு:
இலங்கை மீனவர்கள் வழி மாறி இந்திய பகுதியில் நுழைவதை தடுக்க புதிய கடல் பாதை அமைக்க இலங்கை அரசு முடிவு செய்துள்ளது.
இது பற்றி இலங்கை தேசிய மின் வளத்துறை ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி ஏஜென்சியின் தலைவர் பிரியதாசா எப்ரிசிங்கே தெரிவித்திருப்பதாவது:
இந்திய பொருளாதார கடல் மண்டலம் வழியாக சிறப்பு நீர் வழிப்பாதை அடையாளம் காணப்பட்டுள்ளது.
இது குறித்து மீன்வளத்துறை விரைவில் இந்திய அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தவிருக்கிறது. இதற்கான வரைபடங்கள் மிக கவனத்துடன்தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த பாதையின் முலம் இலங்கை மீனவர்கள் இந்திய கடல் பகுதிக்குள் நுழைவது தடுக்கப்படும்.
ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கான இலங்கை மீனவர்கள் இந்திய சிறையில் அடைக்கப்படுகின்றனர். இந்த பிரச்சனைக்கு புதிய நீர் வழிப்பாதை முலம்தீர்வு பிறக்கும் என தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications