தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் 4 பேருக்கு ஜாமீன்
சென்னை:
தர்மபுரியில் 3 மாணவிகள் உயிரோடு எரித்து கொல்லப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த அ.தி.மு.க.வினர்4 பேருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீது கொடைக்கானலில் இருக்கும் பிளசன்ட் ஸ்டே ஹொட்டல் கட்டமுறைகேடாக அனுமதி வழங்கப்பட்டதாக தனி நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்தது.
இந்த வழக்கில் ஜெயலலிதாவுக்கு சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டதை தொடர்ந்து தமிழகம்முழுவதும் வன்முறை வெடித்தது. இதில் தர்மபுரியில் கோவை வேளாண் கல்லூரி மாணவிகள் பயணம் செய்த பஸ்கொளுத்தப்பட்டது. இதில் 3 மாணவிகள் உயிரோடு கொளுத்தப்பட்டனர்.
இது தொடர்பாக 31 அ.தி.மு.க.வினர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் சந்திரன், செல்லக்குட்டி, காவேரி, மணிஆகியோர் ஜாமீன் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இவர்கள் சார்பாக தளவாய் சுந்தரம் ஆஜராகி வாதடினார். வழக்கை விசாரித்த நீதிபதி முருகேசன் இவர்களுக்கு ரூ25 ஆயிரம் சொந்த ஜாமீனும், அதே தொகைக்கு இரண்டு பேர் ஜாமீனிலும் இவர்களை விடுதலை செய்யுமாறுஉத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications