For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ரேடியோ வெங்கடேசனை விடுவிக்கா விடில் ரயில் நிலையம் தகர்க்கப்படும்

By Staff
Google Oneindia Tamil News

கோவை:

ரேடியோ வெங்கடேசனை வெளியில் விடா விட்டால், உடுமலை ரயில் நிலையத்தில் குண்டு வெடிக்கும் என்றுவந்த மர்மக் கடிதத்தால், மடத்துக்குளம் போலீசார் பரபரப்படைந்தனர்.

ராஜ்குமார் கடத்தலின் போது வீரப்பன் விடுத்த பல்வேறு கோரிக்கைகளில் வெள்ளித் திருப்பூர் போலீஸ் ஸ்டேஷன்தாக்கப்பட்ட சம்பவத்தில், கைதான தமிழ்நாடு விடுதலைப் படையைச் சேர்ந்த ரேடியோ வெங்கடேஷன் உள்படநான்கு பேரை விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் ஒன்று.

இந்தக் கோரிக்கை நிறை வேறாத நிலையில், தற்போது உடுமலை ரயில்வே ஸ்டேஷனுக்கு ஒரு மர்மக் கடிதம்வந்தது. அந்தக் கடிதம் தர்மபுரியிலிருந்து அஞ்சல் செய்யப்பட்டிருந்தது. இதனைப் பெற்றுக் கொண்ட உடுமலைரயில்வே ஸ்டேஷன் மாஸ்டர், அதனைப் படித்து பார்த்தார்.

அதில், தமிழ்நாடு விடுதலைப் படையைச் சேர்ந்த ரேடியோ வெங்கடேஷனை விடுதலை செய்ய வேண்டும்.அவ்வாறு 15 நாட்களுக்குள் விடுதலை செய்யாவிட்டால், உடுமலை ரயில் நிலையத்தில் குண்டு வெடிக்கும் எனக்கூறப்பட்டிருந்தது.

இது குறித்து உடுமலை ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டர் , பழனியில் உள்ள ரயில்வே போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல்கொடுத்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X