பஞ்சாப்பில் ரயில் விபத்து: 36 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
சண்டிகர்:
பஞ்சாப் மாநிலம் பார்ட்டிகார் சாஹிப் மாவட்டத்தில் சனிக்கிழமை அதிகாலை பயணிகள் சென்று கொண்டிருந்த ரயிலும், சரக்கு ரயிலும் நேருக்குநேர் மோதிக்கொண்டதில் 36 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி இறந்தனர். 100 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
விபத்து சராய் பஞ்சாரா மற்றும் ராய்புரா ரயில் நிலையங்களுக்கிடையே நடந்தது. அதிகாலை 6.30 மணிக்கு விபத்து நடந்தது. உயர் போலீஸ் அதிகாரிகள்விபத்து நடந்த இடத்திற்குச் சென்றுள்ளனர்.
சடலங்களை மீட்கும் பணி நடந்து வருகிறது. விபத்தில் இறந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் பெயர், இதர விவரங்கள் எதுவும் தெரியவில்லை.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications