தமாகா கட்சியுடன் பாமக கூட்டணியா: மூப்பனார் நழுவல்
கோவை:
தமிழகத்தில் வரும் சட்டசபைத் தேர்தலில் பாமக, அதிமுக - தமாகா கட்சிகளுடன் கூட்டணி அமைத்துக்கொள்ளுமா என்பதற்கு மூப்பனார் சரியான பதில் சொல்லாமல் நழுவி விட்டார்.
ஞாயிற்றுக்கிழமை கோவையில் நடந்த திருமணம் ஒன்றில் கலந்து கொண்டு விட்டு அவர் நிருபர்களிடம்கூறியதாவது:
வரும் சட்டசபைத் தேர்தலில் யாருடன் கூட்டணி சேருவது என்பது குறித்து பாட்டாளி மக்கள் கட்சி இன்னும்முடிவெடுக்கவில்லை.
பாமக வுடன் யார் வேண்டுமானாலும் கூட்டணி வைத்துக் கொள்ளலாம் என்று ராமதாஸ் கூறியதாக செய்திவந்துள்ளது என்று கூறுகிறார்கள்.
நான் அந்த செய்தியை இன்னும் படிக்கவில்லை. ராமதாஸ், தமிழ் மாநில காங்கிரஸ் மற்றும் அதிமுக வுடன்கூட்டணி வைத்துக் கொள்வாரா என்று கேட்கிறார்கள். எனக்கு அதுபற்றி எதுவும் தெரியாது. ராமதாஸ் ஏன்என்னிடம் வர வேண்டும்?
அதிரடிப்படை நடவடிக்கை:
வீரப்பனைப் பிடிக்கும் நடவடிக்கையில் இரு மாநில அரசுகளும் திருப்திகரமாகச் செயல் படுகிறார்கள். அதிரடிப்படையினர் காட்டுக்குள் புகுந்து வீரப்பனைப் பிடிப்பார்கள் என்று நம்புவோம் என்றார் மூப்பனார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications