For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

புதன்கிழமை கூடுகிறது புளோரிடா சட்டசபை

By Staff
Google Oneindia Tamil News

டல்லாஸ்சீ:

குடியரசுக் கட்சியினரிடம் இருக்கும் புளோரிடா மாகாண சட்டசபை புதன்கிழமை கூடுகிறது.

ஜார்ஜ்ரபுஷ் புளோரிடா மாகாணத்தில் 25 எலக்டரல் ஓட்டுக்களை பெற்று முன்னணியில் இருக்கிறார்.

அவரை அதிகார பூர்வமாக வெற்றி பெற்றதாக அறிவிக்க வேண்டும் என புளோரிடா மாகாண குடியரசுக் கட்சிஉறுப்பினர்கள் வலியுறுத்துவார்கள் என தெரிகிறது.

அல்கோரை விட 537 ஓட்டுகள் அதிகம் பெற்று ஜார்ஜ் புஷ் முன்னணியில் இருந்தாலும் அவர் வெற்றி பெற்றதாகஅதிகார பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. 537 ஓட்டுகள் அதிகம் பெற்றதால் புஷ்ஷுக்கு புளோரிடா மாநிலத்தில்25 எலக்ட்ரால் ஓட்டுகள் கிடைத்துள்ளன.

குடியரசுக் கட்சியிடம் இருக்கும் புளோரிடா மாகாண சட்டசபை கூட்டம் புதன்கிழமை கூடுகிறது. அவர்கள் இந்தகூட்டதிதல் புஷ்ஷின் வெற்றியை அதிகார பூர்வமாக அறிவிக்கபட வேண்டும் என வலியுறுத்த உள்ளனர்.

இந்த சிறப்பு சட்டசபைக் கூட்டத்திற்கு புளோரிடா செனட் அதிபர் ஜான் மெக்கே எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்.இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றபட இருக்கும் தீர்மானத்திலும் கையெழுத்திடப் போவதில்லை எனவும்கூறியுள்ளார்.

புளோரிடா மாநில ஓட்டு எண்ணிக்கை பற்றி இரு தரப்பு வாதத்தை கேட்ட பின் அந்நாட்டு உச்ச நீதிமன்றம்விசாரணையை ஒத்தி வைத்தது. நீதிமன்றம் ஞாயிற்றுக்கிழமை தீர்ப்பு வழங்கும் என அனைவரும் எதிர்பார்த்தனர்என்பது குறிப்பிடத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X