வீரப்பன் சரணடைய வாய்ப்பளியுங்கள்: ராமதாஸ்
திருச்சி:
வீரப்பனுக்கு சரணடைய வாய்ப்பளிக்க வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
வீரப்பனுக்கு சரணடைவதற்கு ஒரு வாய்ப்பு கொடுக்கலாம். அதன் பின் பொது மன்னிப்பு வழங்குவது பற்றி சிந்திக்கலாம் என டாக்டர் ராமதாஸ்கூறியுள்ளார். இது குறித்து திருச்சியில் அவர் நிருபர்களுக்கு அவர் அளித்த ப்ேட்டியின் விவரம்:
ராஜ்குமார் விடுதலை தொடர்பான விவரங்களை தமிழக. கர்நாடக அரசுகள் வெளியிட்டுள்ளன. மேலும் விவரங்களை அவர்கள்தான் தெரிவிக்க வேண்டும்.இந்தியாவில் விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு தடை கொண்டு வருவது குறித்து எந்த விதமான ஆட்சேபமும் கிடையாது.
வீரப்பன் காட்டுக்குள்தான் இருக்கிறாரா அல்லது அங்கிருந்து தப்பி விட்டாரா என நான் ஆருடம் சொல்ல விரும்பவில்லை. வீரப்பனுக்கும் எனக்கும்எந்த விதமான தொடர்பும் கிடையாது.
வீரப்பனை பிடிக்க ஏற்கனவே ரூ 400 கோடி செலவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பல கோடிகள் கூட செலவாகும்.
அதிரடிப்படை நடவடிக்கையால் அந்த பகுதியில் வாழும் மக்களுக்கு எந்த விதமான பாதிப்பும் வராமல் பார்த்துக் கொள்ளப்பட வேண்டும். முன்னர்அப்பகுதியில் நடந்த சம்பவங்கள் குறித்து நெடுமாறன் சொல்லியிருப்பது போல் மனித உரிமை கமிஷன் விசாரணை நடத்த வேண்டும். அதிரடிப் படையால் மீண்டும்அராஜகம் நடக்கக் கூடாது என ராமதாஸ் கூறினார்.












Click it and Unblock the Notifications