பஞ்சாப் ரயில் விபத்து: நீதி விசாரணைக்கு உத்தரவு
சரைபஞ்சரா (பஞ்சாப்):
பஞ்சாப்பில் சனிக்கிழமை நடந்த ரயில் விபத்து குறித்து நீதி விசாரணை நடத்தப்படும் என்று ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
ரயில் விபத்து:
பஞ்சாப் மாநிலம் அம்பாலா அருகே அமிர்தசரஸ் ரயில் விபத்துக்குள்ளாகி 46 பேர் பலியானார்கள். 150 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
மம்தா விரைந்தார்:
விபத்து நடந்த இடத்தை ரயில்வே அமைச்சர் விரைந்து சென்று பார்வையிட்டார். அவருடன் இணை அமைச்சர் திக் விஜய் சிங்கும் சென்றிருந்தார்.
அங்கு நிருபர்களிடம் மம்தா கூறியதாவது:
ரயில் விபத்து குறித்து விபத்துக்குள்ளான ரயில்களின் டிரைவர்கள், தொழில்நுட்ப ஊழியர்கள் ஆகியோர் கூறி உள்ள காரணம் முரண்பாடு உடையதாகஇருக்கிறது. அதிருப்தி அடைவதாகவும் இது உள்ளது.
விபத்துக்குக் காரணமானவர்கள் குறித்து பாரபட்சமின்றி விசாரணை நடத்தப்படும். விபத்துக்குப் பொறுப்பேற்று நான் ராஜினாமா செய்வது ரயில்வேதுறைக்கு சாதகமாக அமைவதானால் நான் ராஜினாமா செய்யத் தயார்.
இந்த விபத்து குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.
வாஜ்பாய், சோனியா இரங்கல்:
ரயில் விபத்து குறித்து பிரதமர் வாஜ்பாய் வருத்தம் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு எனது அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.ரயில்வே இலாகாவுக்குத் தேவையான பாதுகாப்பை மேம்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.
காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி கூறுகையில், ரயில் விபத்தில் ஏராளமானவர்கள் பலியானது குறித்து அதிர்ச்சி அடைந்தேன்.
இது போன்ற ரயில் விபத்துக்கள் நடப்பது கவலையளிக்கிறது. ரயில் பயணிகளுக்குத் தேவையான பாதுகாப்பு அளிக்க அனைத்து நடவடிக்கைகளும்எடுக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications