மீண்டும் தமிழகத்தில் புயல்
சென்னை:
வங்கக் கடலில் இன்னும் இரண்டு நாட்களில் புயல் உருவாகும் என வானிலை ஆராய்ச்சி மையம் கூறியுள்ளது. இதனால்தமிழகத்தில் மழை பெய்யும் என தெரிய வகுகிறது.
தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் வங்கக்கடலில் ஏற்பட்ட புயல்கடலூர் அருகே கரையைக் கடந்தது. இதனால் கடலூரில் பலத்த சேதம் ஏற்பட்டது. ஆனால் குறிப்பிடத்தக்க அளவு மழைபெய்யவில்லை.
தற்போது வங்கக்கடலின் தென்மேற்கு மேற்கு மத்திய பகுதியிலும் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது. இதுகுறித்து வானிலை ஆராய்ச்சி நிலையம் தெரிவித்திருப்பதாவது:
வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காறழுத்த தாழ்வு மண்டலம் இரண்டு நாட்களில் புயலகா மாறலாம். இதன்காரணமாகவடதமிழ்நாடு, தெற்கு ஆந்திர கடற்கரையோரத்திலும் கன மழை பெய்யும்.
சென்னையிலும் அதை சுற்றியுள்ள பகுதிகளிலும் இடியுடன் கூடிய பலத்த மழைபெய்யும். ஆந்திர கடற்கரையோர பகுதிகளில்இரண்டு நாட்களாகவே கன மழை பெய்து வருகிறது.சென்னையிலும் அடுத்த 48 மணி நேரத்தில் கன மழை பெய்யும் எனதெரிவிக்கப்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications