மணிப்பூரில் பாதிரியார் சுட்டுக்கொலை
இம்பால்:
மணிப்பூரில் கிறிஸ்தவ பாதிரியார் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
மணிப்பூர் மாநிலம் தோபால் மாவட்டத்தில் சுக்னு என்ற இடத்தில் புனித ஜோசப் ஆலயம் உள்ளது. அங்கு பாதிரியாராக இருந்தவர் ஜேக்கப்சிட்டினாஎன்ற சாஜன்.
சம்பவத்தன்று அடையாளம் தெரியாத 2 வாலிபர்கள் கிறிஸ்தவ ஆலயத்துக்கு வந்து பாதிரியார் ஜேக்கப்பை துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றனர்.
பின்னர் அவரை சுட்டுக் கொன்று விட்டு 2 வாலிபர்களும் தப்பி ஓடி விட்டனர். கிறிஸ்தவ ஆலயத்தில் இருந்து சிறிது தூரத்தில் பாதிரியாரான உடல்கிடந்தது.
தகவல் அறிந்ததும் போலீஸார் விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். இந்தக் கொலைக்கான காரணம் என்ன என்பது தெரியவில்லை.
புனித ஜோசப் ஆலயம் சார்பில் பள்ளி ஒன்று நடத்தப்படுகிறது. பள்ளி நிர்வாகத்தாரிடம் ரூ 50, 000 தருமாறு தலைமறைவு இயக்கத்தைச் சேர்ந்தவர்கள்கேட்டு உள்ளனர். இந்த படுகொலைக்கும் இவர்களுக்கும் தொடர்பு உண்டா என்று விசாரணை நடந்து வருகிறது.












Click it and Unblock the Notifications