இன்று தபால் ஊழியர்கள் வேலைநிறுத்தம்
டெல்லி:
செவ்வாய்க்கிழமை தபால் ஊழியர்களின் நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டம் மாலை 6 மணி முதல்தொடங்குகிறது.
அவர்களது கோரிக்கைகளை அமல்படுத்தக் கோரி, அவர்கள் காலவரம்பற்ற வேலை நிறுத்தம் செய்யத்தீர்மானித்திருக்கின்றனர்.
தபால் ஊழியர்களின் தேசிய சம்மேளனம், தபால் அமைப்பின் தேசிய சம்மேளனம், பாரதிய தபால் ஊழியர்சம்மேளனம் ஆகிய சங்கங்கள் வேலை நிறுத்த நோட்டீஸ் அளித்துள்ளனர்.
இந்த ஆண்டு மே மாதம் முதல் தங்களுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை நிறைவேற்றவில்லை என்று அவர்கள்கூறியுள்ளனர்.
ஐந்தாவது ஊதியக் குழு பரிந்துரை அமலுக்குப் பிறகு அரசிதழ் பதிவு பெறாத ஊழியர்களுக்கான ஊதியவிகிதத்தில் காணப்படும் முரண்பாடுகள் நீக்கப்பட வேண்டும் என்று பாரதிய தபால் ஊழியர் சம்மேளனபொதுச்செயலர் யாதவ் வலியுறுத்தியுள்ளார்.
போஸ்ட்மேன், மெயில் கார்டு ஆகியோருக்கு ஊதிய விகிதத்தை உயர்த்த வேண்டும். தற்காலிகப் பணியாளர்களின்நலன் காக்கப்பட வேண்டும்.
அனைத்துப் பிரிவுகளிலும் காலி இடங்கள் நிரப்ப வேண்டும் என்பவை தொழிற்சங்கங்களின் பிற முக்கியக்கோரிக்கைகள்.