ரயில் வெடிகுண்டு: சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை ரயிலில் வெடிகுண்டு இருந்த சம்பவம் தொடர்பான வழக்கை விசாரிக்குமாறு சி.பி.சி.ஐ.டி-க்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
காஷ்மீரிலிரூந்து வரும் ஜம்முதாவி ரயிலில் சிறிய காஸ் சிலிண்டரில் 1,5 வோல்ட் கொண்ட 8 பேட்டரிகள் பொருத்தப்பட்ட வெடிகுண்டுகள் இருந்தது திங்கள்கிழமையன்று கண்டு பிடிக்கப்பட்டது.
இது குறிப்பிட்ட சமயத்தில் வெடிக்காததால் பயணிகள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இந்த வெடிகுண்டு செயலிழக்கச் செய்யப்பட்டது. இதுகுறித்து ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இப்போது இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.யின் சிறப்பு புலனாய்வுத்துறை போலீசாரால் விசாரிக்கப்படும் என போலீஸ் டி.ஜி.பி. ராஜகோபாலன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications