கேரளா: கண்ணூ
கண்ணூர்:
கேரள மாநிலத்தில் அரசியல் வன்முறைக்கு இரண்டு நாளில் 6 பேர் இறந்தனர். பாரதிய ஜனதா, மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட்டுகளின் தொடர் வன் முறையால், கண்ணூரில் பதட்டம் நிலவி வருகிறது.
எப்போதும் "ஜென்ம விரோதிகளாக இருந்து வரும் இரு அரசியல்கட்களில் பாரதிய ஜனதாவும், மா.கம்யூ.,வும்தான். கருத்தில், கொள்கையில் மட்டுமல்ல, நேருக்கு நேர் சந்தித்துக் கொள்ளும் அளவிற்கு இவர்கள் பகைகேரளாவில் வளர்ந்துள்ளது. பார்த்துக் கொண்டாலே இவர்களிடையே பகை, புகைய ஆரம்பித்து விட்டது.
கடந்த மூன்று நாட்களில் மட்டும் இந்த பகை 6 பேரைப் பலிவாங்கியுள்ளது. அதுவும் கேரள முதல்வர் நாயனார்தொகுதியிலேயே நடந்துள்ள இந்த வன்முறைச் சம்பவம் கேரளாவையே உறைய வைத்துள்ளது.
கடந்த 4ம் தேதி நடந்த சம்பவங்களில் 4 பேர் வெட்டிக் கொல்லப்பட்டனர். இந்நிலையில், கூத்துப் புறம்பா என்றஇடத்தில் டிசம்பர் 5ம் தேதி அதிகாலையிலும் கொலை வெறி தொடர்ந்தது.
அதிகாலை 3 மணிக்கு பா.ஜ தொண்டர் ஒருவரை, கம்யூனிஸ்ட் கட்சியினர் வெட்டிக் கொன்றனர். அடுத்த 5 மணிநேரத்திற்குள் பானூரில் கம்யூனிஸ்ட் தொண்டர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
பழிக்குப் பழி வாங்கும் இந்த அரசியல் படுகொலைக்கு கண்ணூ
முதல்வர் நாயனார் வெளிநாடு சென்றிருக்கும் இந்த சூழ்நிலையில், சட்டம் ஒழுங்கை பராமரிக்கும் முக்கியப் பணிபோலீசாரின் தலையிலேயே விடிந்துள்ளது.