டிசம்பர் 6: கருப்பு தினமாக அனுசரிப்பு
மும்பை:
1992 ம் வருடம் உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டதைத் தொடர்ந்து நாடுமுழுவதும் பல முஸ்லீம் அமைப்புகள் கருப்பு இந்த நாளை கருப்பு நாளாக அனுசரித்து வருகின்றனர்.
வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த பாபர் மசூதி 1992 ம் வருடம் இடித்துத் தரை மட்டமாக்கப்பட்டது. இதைத் தொடர்ந்துசமீபத்திய வருடங்களில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட நாளில் பஸ், ரயில் நிலையங்களில் குண்டு வெடிப்புச்சம்பவங்கள் ஏற்பட்டது.
இதையொட்டி இந்தியா முழுவதும் எந்த வித அசம்பாவிதச் சம்பவங்களும் ஏற்பட்டு விடக்கூடாதென்று பலத்தபோலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
குறிப்பாக மசூதிகள், கோவில்கள், சர்ச்சுகள், ரயில்நிலையங்கள், பஸ் நிலையங்களில் கூடுதல் பாதுகாப்புபோடப்பட்டுள்ளது.
மும்பையில்:
மும்பையில் உள்ள அனைத்து மசூதிகளிலும், முஸ்லீம் அமைப்பினர் பாபர் மசூதி இடிக்கப்பட்ட 8 வது வருடமானபுதன்கிழமை சிறப்பு தொழுகைகள் நடத்தினர். மும்பையில் உள்ள மினரா மசூதியில் தேசிய ஒற்றுமையைஏற்படுத்தும் விதத்தில் சிறப்பு தொழுகைகள் நடத்தப்பட்டது.
தொழுகையில் கலந்து கொண்ட முஸ்லீம்கள் அயோத்தியில் மீண்டும் பாபர் மசூதி எழுப்பப்பட வேண்டும் என்றுவலியுறுத்தினர்.
மேலும் அவர்கள் நடத்திய ஊர்வலத்தில் மசூதி இடிப்புக்குக் காரணமாகக் கூறப்பட்ட மத்திய அமைச்சர்கள்அத்வானி, முரளி மனோகர் ஜோஷி மற்றும் உமா பாரதி ஆகியோர் ராஜினாமா செய்ய வேண்டும் என்றுகோஷமிட்டனர்.
இந்த ஊர்வலத்துக்கு மும்பை முஸ்லீம் லீக் தலைவர் முகமது பரூக் அசாம் தலைமை தாங்கினார்.
தலைநகரில்:
தலைநகர் டெல்லியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட தினமான புதன்கிழமை ஹிந்துக்கள் சஹார்யா திவாஸ் என்றபெயரில் விழா போல் கொண்டாடினர். ஆனால் முஸ்லீம்களோ இந்த தினத்தை கருப்பு தினமாக அனுஷ்டித்தனர்.
நாடாளுமன்ற அவை ஒத்திவைப்பு:
அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டதற்குக் காரணமான 3 மத்திய அமைச்சர்களும் பதவி விலக வேண்டும்என்று ராஜ்யசபாவிலும், லோக்சபாவிலும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தினர்.
கேள்வி நேரம் முடிந்ததும் இப்பிரச்சனை குறித்து கேள்வி எழுப்புங்கள் என்று மாநிலங்களவை தலைவர்கிருஷ்ணகாந்தி கூறினார். ஆனால் எதிர்க்கட்சிகள் இதைக் காதில் போட்டுக் கொள்ளவேயில்லை.
இதையடுத்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டது.
இருப்பினும் மசூதி இடிக்கப்பட்ட வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட மத்திய அமைச்சர்கள் அத்வானி, முரளி மனோகர்ஜோஷி மற்றும் உமாபாரதி ஆகியோர் ராஜினாமா என்ற பேச்சுக்கே இடமில்லை என்று பிரதமர் வாஜ்பாய்திட்டவட்டமாகக் கூறி விட்டார்.
யு.என்.ஐ.
-
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்? -
175 சீட் "மாஸ்டர் பீஸ்" தலைகீழாக போகுதே? கியரை மாற்றிய திமுக, அஇஅதிமுக.. லட்டு சான்ஸ் மிஸ் ஆகிறதே? -
நாடு முழுதும் ESMA அமல்.. கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் மத்திய அரசு அதிரடி.. மீறினால் அவ்வளவுதான்












Click it and Unblock the Notifications