For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

விடுதலைப் புலிகள் விவகாரம்: புதுவை சட்டசபையில் கூச்சல்

By Staff
Google Oneindia Tamil News

பாண்டிச்சேரி:

பாண்டிச்சேரி கூட்டுறவுத் துறை அமைச்சர் தேனி ஜெயக்குமாருக்கும், விடுதலைப் புலிகளுக்கும் ரகசியத் தொடர்பு உள்ளது என்று அமைச்சர் கண்ணன் கூறியவிவகாரம் புதுவை சட்டசபையில் எழுப்பப்பட்டதைத் தொடர்ந்து கூச்சல், குழப்பம் ஏற்பட்டது.

தமிழ் மாநில காங்கிரஸ் (மனோகர் அணி) எம்.எல்.ஏ.க்கள் 2 பேர் மற்றும் பொதுப்பணித் துறை அமைச்சர் கண்ணன் ஆகியோர் வெளிநடப்புச் செய்தனர்.

வியாழக்கிழமை காலை சட்டசபை கூடியதும், எதிர்க்கட்சித் தலைவர் ஜானகிராமன் (திமுக), அமைச்சர் தேனி ஜெயக்குமாருக்கு, விடுதலைப் புலிகளுடன்உள்ள தொடர்பு குறித்து விவாதம் நடத்தப்பட வேண்டும் என்று சபாநாயகர் சுப்ரமணியத்திடம் கூறினார்.

உடனே அவர் சமீபத்தில் ஏற்பட்ட புயல் சேதம் குறித்து விவாதிக்கப்பட்ட பின்தான் பிற விஷயங்கள் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும் என்றார்.

அப்போது குறுக்கிட்ட முதல்வர் சண்முகம், தேனி ஜெயக்குமாருக்கு விடுதலைப் புலிகளுடன் தொடர்பு இருந்தால் அவர் மீது சட்டப்படி நடவடிக்கைஎடுக்கப்படும். மேலும் இந்த விஷத்தில் ஆதரங்கள் இருந்தால் அதை புதுவை அரசு ஏற்றுக் கொள்ளும் என்றார்.

இதையடுத்து தேனி ஜெயக்குமாரும், விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனும் ஒன்றாகச் சேர்ந்து எடுக்கப்பட்ட புகைப்படத்தை அமைச்சர் கண்ணன்முதல்வர் சண்முகத்திடம் கொடுத்தார்.

முன்னதாக, இப்பிரச்சனை குறித்து சபாநாயகர் விவாதம் செய்ய மறுப்பு தெரிவித்ததையடுத்து அமைச்சர் கண்ணன் மற்றும் மனோகர் பிரிவுஎம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்புச் செய்தனர். தொடர்ந்து திமுக உறுப்பினர்களும் தொடர்ந்து வெளிநடப்புச் செய்தனர்.

அமைச்சர் கண்ணன் மற்றும் மனோகர் அணி தமிழ் மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சட்டசபையில் கூச்சல், குழப்பத்தை ஏற்படுத்தினர்.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X