இந்தியா-புலிகள் உறவு: நெடுமாறன் கோரிக்கை
மதுரை:
இலங்கையில் ஈழத்தமிழர் பிரச்சனையில் மத்திய அரசு உதவ வேண்டும் என்று தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் புதன்கிழமை கூறினார்.
மதுரையில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
ஈழத் தமிழர் பிரச்சனையில் ராஜீவ் காந்தியின் பழைய கொள்கைகளை விட்டு விட வேண்டும். விடுதலைப் புலிகளுடன் சுமூக உறவை வளர்த்துக் கொள்ளவேண்டும்.
இந்திரா காந்தி காலத்தில் ஈழத்தமிழர்கள் மீது அனுதாபம் இருந்தது. ஆனால் ராஜீவ்காந்தி காலத்தில் விடுதலைப்புலிகளுக்கு எதிராக அனைவரும்செயல்பட்டனர்.
புலிகளுக்கும், இலங்கை அரசுக்கும் இடையே சுமூக உறவு ஏற்படும் வகையிலும், இனப் பிரச்சனைக்கு விரைவில் தீர்வு காணும் வகையிலும் நார்வேதூதுக்குழு இறங்கியுள்ளது.
காங்கிரஸ் கட்சி ராஜீவ் காந்தி கொள்கைகளை ஆதரிப்பது தவறு என்று தான் புதிய ஆட்சியை மக்கள் கொண்டு வந்துள்ளனர். எனவே மத்திய அரசுஈழத் தமிழர் பிரச்சனையில் தலையிடத் தயக்கம் காட்டக் கூடாது.
நார்வே நாடு எடுத்து வரும் முயற்சிகளுக்கு இந்தியா முழுஉதவியும் செய்ய வேண்டும். பேச்சுவார்த்தைக்கும், அதில் எடுக்கப்படும் முடிவுகளுக்கும் இந்தியாமுக்கிய பங்கு வகிக்க வேண்டும்.
தமிழக மீனவர்கள் பிரச்சனை:
தமிழக மீனவர்கள் இலங்கை ராணுவ வீரர்களால் சுட்டுக் கொல்லப்பட்டு வருவது தொடர்ந்து நடந்து வருகிறது. எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள்நிகழாமல் ராணுவ வீரர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வீரப்பன் விவகாரம்:
வீரப்பன் விவகாரத்தில் வெள்ளை அறிக்கை வெளியிடுவது குறித்து அரசுதான் முடிவு செய்ய வேண்டும். ஜெயலலிதா ஆட்சி காலத்தில் இருந்தே வீரப்பன்விஷயத்தில் என்ன நடந்தது என்பது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்றார் நெடுமாறன்.












Click it and Unblock the Notifications