வாஜ்பாய் பேச்சு: நாடாளுமன்றத்தில் பெரும் அமளி

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

அயோத்தி பிரச்சனை குறித்து பிரதமர் வாஜ்பாய் தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடாளுமன்றத்தின்இரு அவைகளிலும் எதிர்க் கட்சிகள் பெரும் பிரச்சனையைக் கிளப்பின. இதையடுத்து லோக்சபாவும் ராஜ்யசபாவும்ஒத்தி வைக்கப்பட்டன.

வாஜ்பாய் ராஜினாமா செய்ய வேண்டும் என எதிர்க் கட்சிகள் கோரிக்கை விடுத்தன.

அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணி ஒரு தேசிய உணர்வாகும். இந்தப் பணி இன்னும் நிறைவடையவில்லைஎன வாஜ்பாய் கூறியிருந்தார்.

வாஜ்பாய் ராஜினாமா செய்ய வேண்டும் என எதிர்க் கட்சியினர் குரல் கொடுக்க இதை எதிர்த்து பாரதிய ஜனதாகட்சியினர் குரல் கொடுத்தனர். இதனால் அவைகளில் பெரும் அமளி நிலவியது. ஒரே கூச்சலும் குழப்பமும்காணப்பட்டது.

கிட்டத்தட்ட எல்லா உறுப்பினர்களும் எழுந்து நின்று கத்திக் கொண்டும், குரல் எழுப்பிக் கொண்டும் இருந்தனர்.

அவர்களை அமைதிப்படுத்த சபாநாயகர் பாலயோகி எடுத்த முயற்சிகள் பலன் அளிக்கவில்லை. இதையடுத்துலோக் சபாவை அவர் ஒத்திவைத்தார்.

ராஜ்யசபா:

ராஜ்யசபாவில் கூட்டம் தொடங்குவதற்கு முன்பே எம்.பிக்கள் வாஜ்பாய்க்கு எதிராக குரல் எழுப்பஆரம்பித்துவிட்டனர். பாபர் மசூதி இடிப்பில் தொடர்புடைய அத்வானி, உமா பாரதி, முரளிமனோகர் ஜோஷிஆகியோர் ராஜினாமா செய்ய வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து ஆளுந் கட்சியினருக்கும் எதிர்க் கட்சியினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அவை நாளைவரை ஒத்தி வைக்கப்பட்டது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+