டிச. 12 ல் மின்வாரிய ஊழியர்கள் வேலைநிறுத்தம்
சென்னை:
மின்வாரியத்தை தனியார் மயமாக்குவதை கண்டித்து, மின்வாரியத் தொழிலாளர்கள் இந்தமாதம் 12-ம் தேதி நாடு முழுவதும் வேலை நிறுத்தத்தில்ஈடுபடுகின்றனர்.
இது தொடர்பாக தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் பொதுச் செயலாளர் பஞ்சரத்தின,தமிழக மின்வாரிய பொறியாளர் கழக பொதுச் செயலாளர்சிவப்பிரகாசம் இருவரும் இணைந்து வியாழக்கிழமை நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர்
பேட்டியில் அவர்கள் கூறுகையில், தற்போது நடைபெற்று வரூம் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மின்சார மசோதா 2000 கொண்டு வரப்படும் எனமத்திய அமைச்சர் அறிவித்துள்ளார்.
இந்த மசோதா கொண்டு வரப்பட்டால் நாட்டில் இருக்கும் 22 மின்வாரியங்கள் தனியார்மயமாகிவிடும்.
மின்வாரிய ஊழியர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். தனியார் லாப நோக்கத்துடன் செயல்படுவதால் மின்சார கட்டணம் அதிகமாகும். பல கஷ்டங்களும்ஏற்படும்.
இதை கருத்தில் கொண்டு மின்சார மசோதா கொண்டு வருவதை கண்டித்து இந்த மாதம் 12-ம் தேதி நாடு முழுவதும் மின்சார ஊழியர்கள் அனைவரும் ஒரு நாள்அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர்.
இந்த வேலை நிறுத்தத்தில் தமிழகத்தில் இருக்கும் 10 சங்கங்களைச் சேர்ந்த 20 ஆயிரம் ஊழியர்கள் கலந்து கொள்கிறார்கள்.
தமிழ்நாட்டில் மின்வாரியம் தனியார் மயமாக்கப்படாது என ஆற்காடு வீராசாமி கூறியுள்ளதால் எங்கள் போராட்டம் மத்திய அரசை எதிர்த்துத்தான்.
மத்திய அமைச்சர் மாநில அரசின் ஒப்புதல் பெற்று புதியமசோதா நிறை வேற்றப்படும் என கூறியுள்ளார். இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால்காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவோம்.
தற்போது அறிவித்துள்ள வேலை நிறுத்தத்தால் மின் விநியோகம் பாதிக்கப்படாது. மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என கூறினர்.












Click it and Unblock the Notifications