கிரிக்கெட் ஊழல்: விசாரிக்க சர்வதேச அதிகாரிகள் வருகை
லண்டன்:
கிரிக்கெட்டில் ஊழல் செய்தவர்கள் மீது கிரிக்கெட் வாரியம் நடவடிக்கை எடுத்ததையடுத்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் ஊழல் தடுப்பு விசாரணைஅதிகாரிகள் இந்தியா வந்திருக்கிறார்கள்.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் ஊழல் தடுப்பு பிரிவின் தலைவராக இருப்பவர் பால்காண்டன். எல்லா நாடுகளிலும் இருக்கும் கிரிக்கெட் அணிகள் மீதுள்ளஊழல் குற்றச்சாட்டு பற்றி இவர் விசாரணை செய்து வருகிறார்.
இந்திய கிரிக்கெட்டில் ஊழல் செய்தவர்கள் மீது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதையடுத்து பால் காண்டனும்,ஆஸ்திரேலியாவின் சிறப்பு விசாரணை அதிகாரி கிரேக் மெமலிக்கும் இந்தியாவிற்கு வந்துள்ளனர்.
இவர்கள் சி.பி.ஐ. அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் பற்றி விசாரணை நடத்த இருக்கின்றனர். இவர்கள் இந்திய கிரிக்கெட் வாரியஅதிகாரிகளுடனும், டெல்லி போலீஸ் உயர் அதிகாரிகளுடனும், மத்திய அரசின் உயர் அதிகாரிகளுடனும் ஆலோசனை நடத்தவிருக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications