அசாமை விட்டு ஓடும் ஹிந்தி பேசும் மக்கள்

Subscribe to Oneindia Tamil

கவுஹாத்தி:

அசாம் மாநிலத்தில் வசிக்கும் ஹிந்தி மொழி பேசும் மக்கள் தீவிரவாதிகளின் தாக்குதலுக்குப் பயந்து அசாமை விட்டுஓடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

6 வாரங்களில் மட்டும் ஹிந்தி மொழி பேசும் மக்கள், உல்பா தீவிரவாதிகளால் படுகொலை செய்யப்பட்டுள்ளதுஇதற்குச் சிறந்த சான்றாகும்.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், டின்சுகியா மாவட்டத்திலுள்ள குக்குர்மாரி பகுதியில் சென்று கொண்டிருந்த 3லாரிகளை உல்பா தீவிரவாதிகள் மறித்துக் கண்மூடித்தனமாகச் சுட்டனர். இச்சம்பவத்தில் 28 பேர் பலியானார்கள்.இச்சம்பவம் வியாழக்கிழமை நடந்தது. தாக்குதலில் உயிரிழந்தோர் அனைவரும் ஹிந்தி மொழி பேசுபவர்கள்.

இச்சம்பவத்தில் காயமடைந்த 2 பேரின் நிலை மிகவும் ஆபத்தாக உள்ளது. தாக்குதலில் 30 க்கும் மேற்பட்டதீவிரவாதிகள் ஈடுபட்டனர்.

ஆறு வாரத்தில் நூறு பலி:

இங்கு கடந்த ஆறு வாரங்களில் மட்டும் 100 க்கும் மேற்பட்ட மக்கள், உல்பா தீவிரவாதிகளால் படுகொலைசெய்யப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் ஹிந்தி மொழி பேசும் மக்கள். பெரும்பாலானோர் பிகாரைச்சேர்ந்தவர்கள். தவிரவும் ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து வியாபாரம் செய்வதற்காக அசாம் மாநிலம் வந்தவர்கள்.

முதல்வர் கருத்து:

அசாமில் உல்பா தீவிரவாதிகளால் தொடர்ந்து நடத்தப்படும் தாக்குதல்கள் குறித்து முதல்வர் பிரபல்ல குமார் மேத்தாகூறுகையில், அசாமில் தாக்குதல்கள் நடத்தப்படுவதற்கு உல்பா தீவிரவாதிகளே காரணம். அரசியலில் குழப்பத்தைஏற்படுத்தும் நோக்கில் அவர்கள் இது போன்ற இழிவான செயல்களில் ஈடுபடுகின்றனர்.

அடுத்த வருடம் நடக்கவுள்ள தேர்தலுக்கு முன் மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கை சீர்குலைக்கும் முயற்சியில் அவர்கள்தங்களது அராஜகத்தைக் காட்டி வருகின்றனர் என்றார்.

டெல்லி விரைந்தார் முதல்வர்:

இதற்கிடையே முதல்வர் பிரபல்ல குமார் மேத்தா வியாழக்கிழமை டெல்லி விரைந்தார். அங்கு மத்திய உள்துறைஅமைச்சர் அத்வானியை சந்தித்து அசாமில் உள்ள பதட்ட நிலை குறித்து தெரிவித்தார்.

மேலும் அசாம் மாநிலத்தில் நடக்கும் வன்முறையைக் கட்டுக்குள் கொண்டு வர மத்திய அரசு இன்னும் அதிகபோலீஸ் அதிகாரிகளை அசாம் மாநிலத்திற்கு நியமிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

அசாமை விட்டு ஓடும் ஹிந்தி பேசும் மக்கள்:

அசாமில் ஒரு கும்பல் அஸ்ஸாம் மாநிலத்தவர் அல்லாதவர்களைக் குறி வைத்துத் தாக்கி வருகிறது. இங்குராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், பிகார் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் வியாபாரத்திற்காக வருகிறார்கள்.

அசாம் மாநிலம் எங்களுக்கு மட்டுமே சொந்தம். இங்கு வேறு மாநிலத்தவருக்கு இடமில்லை என்று புரட்சிக்கும்பல்ஒன்று இவர்களை குறி வைத்துப் படுகொலை செய்து வருகிறது.

இதனால், இங்கு வாழும் ஹிந்தி மொழி பேசும் வேறு மாநில மக்கள் இங்கிருந்து ஓடும் நிலைக்குத்தள்ளப்பட்டுள்ளனர்.

ஐ.ஏ.என்.எஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+