இது கலிகாலண்டா சாமி
திண்டுக்கல்:
திண்டுக்கல் அருகே 10ம் வகுப்பு மாணவி குழந்தை பெற்றெடுத்தாள். அவரை பள்ளியிலிருந்து நீக்கி தலைமையாசிரியர் உத்தரவிட்டார்.
திண்டுக்கல் அருகே உள்ள பட்டிவீரன்பட்டியில் ஒரு தனியார் பள்ளியில் படித்து வந்த மாணவி ஒருவர் பெண் குழந்தை பெற்றெடுத்தார். பட்டிவீரன்பட்டி அருகேஉள்ள சின்னகவுண்டன்பட்டியைச் சேர்ந்த இவர், கடந்த 15 நாட்களுக்கு முன்பு விடுமுறையில் சென்றார். பின்னர் அவர் மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டு பெண் குழந்தை ஒன்றைப் பெற்றெடுத்தார்.
கடந்த 2 மாதத்திற்கு முன்பு அந்தப் பள்ளியில் நடந்த மருத்துவப் பரிசோதனையிலும் கூட அவர் கர்ப்பமுற்றிருப்பதைக் கண்டறியப் படவில்லை. மேலும்.,கர்ப்பமுற்று இருக்கும் பெண்களின் வயிற்றுப் பகுதி பெரிதாக இருக்கும் அறிகுறியும் இவருக்கு இருக்கவில்லையாம். இதனால் யாரும் சந்தேகிக்காதவகையில் அவர் குழந்தையை வயிற்றில் சுமந்து கொண்டிருந்தார். பிரசவம் முடிந்ததும் பள்ளி நிர்வாகம் அவரை டிஸ்மிஸ் செய்து உத்தரவிட்டுள்ளது.
இவர் கர்ப்பமுற்றதற்கு காரணம் யார் என்பது குறித்து டாக்டர்கள் தீவிரமாக விசாரித்தனர். அப்போது பக்கத்து வீட்டில் அண்ணன் முறையாகும் ஒருவர்காரணம் என தெரிவித்துள்ளார் அந்த சிறுமி.