வீரப்பன்: தயாராகிறது எல்லைப் பாதுகாப்பு படை
பெங்களூர்:
வீரப்பனைப் பிடிப்பதற்காக மணிப்பூர், ராஜஸ்தான் ஆகிய பகுதிகளிலிருந்து வரவுள்ள 1000 எல்லைப் பாதுகாப்புப் படையினர் தயார் நிலையில் உள்ளனர்.அவர்கள் எந்த நேரமும் காட்டுக்குள் சென்று வீரப்பனைத் தேடும் முயற்சியில் இறங்கலாம் என்று தெரிகிறது.
கர்நாடக போலீஸ் அதிகாரிகளின் உயர்மட்டக் குழு வெள்ளிக்கிழமை பெங்களூரில் நடந்தது. கூட்டம் முடிந்ததும் காவல்துறை அமைச்சர் மல்லிகார்ஜூனகார்கே நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
வீரப்பனைப் பிடிப்பதற்காக வரவுள்ள எல்லைப் பாதுகாப்புப் படையினர் 1000 பேர் எந்த நேரத்திலும் பெங்களூர் வரலாம். அவர்களில் 2 கம்பெனிகள்பெங்களூரில் இருப்பார்கள்.
பிறர் கோயம்புத்தூரில் இருப்பார்கள். அதிரடிப்படையினருக்கு எல்லைப்பாதுகாப்புப் படையினரின் தேவை எப்போது வேண்டுமோ அப்போது அவர்கள்காட்டுக்குச் செல்வார்கள்.
கூட்டு அதிரடிப்படை தலைவர்:
தமிழக, கர்நாடக கூட்டு அதிரடிப்படையின் தலைவராக தமிழக ஐ.ஜி.பாலச்சந்திரன் செயல்படுவார்.
கர்நாடக போலீஸ் உயர் அதிகாரிகள் சாங்கிலியானா, சங்கர் பிதரி ஆகியோர் அதிரடிப்படை நடவடிக்கைகள் குறித்து மேற்பார்வையிடுவார்கள் என்றார்கார்கே.












Click it and Unblock the Notifications