காஷ்மீர் போர்நிறுத்தத்தை வரவேற்கிறது பிரான்ஸ்

Subscribe to Oneindia Tamil

பாண்டிச்சேரி:

ரம்ஜான் பண்டிகையையொட்டி மத்திய அரசு சமீபத்தில் அறிவித்திருந்த போர் நிறுத்தத்தை தான் மிகவும் வரவேற்பதாக இந்தியாவிற்கான பிரான்ஸ் தூதர்பெர்னார்டு டி மோன்ட்பெரான்ட் பாண்டிச்சேரியில் சனிக்கிழமை தெரிவித்தார்.

முதல் முறையாக பாண்டிச்சேரி வந்த அவர் நிருபர்களிடம் கூறுகையில், காஷ்மீர் விவகாரம் விரைவில் முடிவுக்குக் வர வேண்டும் என்பதே பிரான்ஸ் நாட்டின்விருப்பமாகும்.

பல்லாண்டுகளாக நடந்து கொண்டிருக்கும் காஷ்மீர் பிரச்சனை, அதனால் ஏற்படும் உ.யிர்ப்பலிகள் ஆகியவற்றுக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். அதற்கு இந்தியா, பாகிஸ்தான் மற்றும் காஷ்மீர் தீவிரவாதிகள் ஒன்றிணைந்து அமைதித் தீர்வு ஏற்படுத்துவதற்கான முயற்சியில் ஈடுபடவேண்டும்.

ரம்ஜானையொட்டி எல்லைப் பகுதியில் போர் நிறுத்தம் கடைபிடிக்கப்படும் என்று பிரதமர் வாஜ்பாய் அறிவித்துள்ளார். இதை பிரான்ஸ் வரவேற்கிறது.

பிரான்ஸ் பிரதமரின் இந்திய வருகை மற்றும் இந்தியப் பிரதமர் வாஜ்பாயின் பிரான்ஸ் வருகை ஆகியவை இரு நாட்டு உறவில் புதிய திருப்பத்தைஏற்படுத்தியுள்ளது. பொருளாதார மற்றும் அரசியல் உறவுகளும் வலுவடைந்துள்ளன.

மின்சாரத் துறை,தொலைத் தொடர்புத்துறை மற்றும் தொழில்நுட்பத்துறை ஆகியவற்றில் இணைந்து செயல்படுவது குறித்து இரு நாடுகளும் ஆலோசித்துவருகின்றன என்றார்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+