மது அருந்துபவர்களுக்கு மூளை அதிகம்
பாரிஸ்:
மது குடிப்பவர்களுக்கு மூளை கூடுதலாக இருக்கிறது என ஜப்பானில் நடந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜப்பானில் 40 முதல் 79 வயதுக்குட்பட்ட 2,000 பேரிடம் தேசிய மருத்துவ மையம் நடத்திய ஆய்வில் மது குடிக்காதவர்களை விட மது குடிப்பவர்கள் பொதுஅறிவில் சிறந்து விளங்குகிறார்கள் என தெரியவந்துள்ளது.
அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ள தகவல்கள் வருமாறு:
சாதாரணமாக 54 சென்டிலிட்டர் அல்லது 74 சென்டிலிட்டரில் மூன்றில் இரண்டு பங்கு ஒயினோ அல்லது காக்டெயில் குடிக்கிறார்கள். மதுஅருந்தாதவர்களைக் காட்டிலும் மது அருந்துபவர்கள் 3.3. புள்ளிகள் முன்னணியில் இருக்கிறார்கள்.
ஆனால் இதற்கு மதுவில் இருக்கும் எந்த ஆல்கஹால் காரணம் என தெரிவிக்கப்படவில்லை. ஏனென்றால் பீர், விஸ்கி, ஒயின், காக்டெயில் அனைத்திலும்ஒரே அளவில்தான் ஆல்ஹகால் கலந்திருப்பது தெரிய வந்துள்ளது.
காக் டெயில் அல்லது ஜப்பானின் அரிசி பீரை குடிக்கும் ஜப்பானியர்கள். அதிகமான மீன்களை சாப்பிடுகிறார்கள். இந்த மீன்களின் வயிற்றில் சுரக்கும் சிலஅமிலங்கள் மூளை வளர்ச்சிக்கு காரணமாக இருப்பதாலேயே மது அருந்துபவர்கள் பொது அறிவில் சிறந்து விளங்குகிறார்கள் என தெரிய வந்துள்ளது.
ஒயின் குடிப்பவர்கள் பாலாடைக் கட்டியை பெருமளவு உண்ணுவதால், இதில் இருக்கும் அதிகப்படியான கொழுப்பு புரோட்டீன் மூளையை கூர்மையாக்குகின்றனஎன இந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.












Click it and Unblock the Notifications