மறைந்தும் கண் தானம் செய்த இளம் தளிர்
சென்னை:
மாடியில் இருந்து கீழே விழுந்து இறந்த 5 வயது சிறுவனின் கண்கள் மற்றும் சிறுநீரகம் தானம் செய்யப்பட்டன.
சென்னை கிறிஸ்வக் கல்லூரி பேராசிரியராகவும், தமிழ் நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தின் சட்ட அதிகாரியாகவும் இருப்பவர் சோமு மதிவாணன். இவரதுமனைவி சரஸ்வதி.
இவர்களுக்கு விஜய், அக்ஷய் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இவர்கள் குடும்பத்துடன் சிந்தாதரிப்பேட்டையில் வசித்து வருகின்றனர்.
விஜய் 5 ம் வகுப்பும், அக்ஷய் 1 ம் வகுப்பும் படித்து வந்தனர். சம்பவத்தன்று அக்ஷை தன் வீட்டு மாடியில் நின்று விளையாடிக் கொண்டிருந்த போது கால்தவறிக் கீழே விழுந்து விட்டான். உடனடியாக அவனை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அக்ஷை புதன்கிழமைஇறந்தான்.
மகன் இறந்த துக்கத்தையும் மறந்து, சோகத்தைத் தாங்கிக் கொண்டு, பெற்றோர்கள் அக்ஷையின் கண்கள் மற்றும் சீரநீரகத்தை தானம் செய்தனர்.












Click it and Unblock the Notifications