5 வதும் பெண் குழந்தையா?: மனைவியின் மூக்கை அறுத்தார் கணவர்
டாக்கா:
வங்கதேசத்தில் 5 வதாகப் பெண் குழந்தைையைப் பெற்றெடுத்ததால் கோபமடைந்த கணவன் தனது மனைவியின்மூக்கை அறுத்தார்.
வங்க தேசத்தில் பெண்கள் பாரமாக கருதப்படுகிறார்கள். இதனால் அங்குள்ளவர்கள் ஆண் குழந்தை பிறப்பதையேவிரும்புகின்றனர்.
தனது மனைவி தொடர்ந்து ஐந்தாவதாக பெண் குழந்தையை பெற்றெடுத்ததால் கோபமுற்ற கணவன் தனதுமனைவியின் மூக்கை வெட்டினார்.
இந்த சம்பவம் வங்க தேச தலைநகர் டாக்காவிலிருந்து 65 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் குக்கிராமமானஉக்கியாராவில் சனிக்கிழமை நடந்துள்ளது.
இது குறித்து வங்கதேசத்தில் இருந்து வரும் பத்திரிக்கை தெரிவித்திருப்பதாவது:
அப்துல் பாரெக் (40) என்பவரின் மனைவி ரஹேலா. பாரெக் ஆண்குழந்தை வேண்டும் என மிகவும் விரும்பிவந்தார். இந்நிலையில்
ஏற்கனவே அவர்களுக்கு 4 பெண் குழந்தைகள் இருக்கிறது. இந்த முறையாவது ஆண் குழந்தை பிறக்கும் எனஎதிர்பார்த்திருந்த பாரெக்கிற்கு ஏமாற்றம் அளிக்கும் விதமாக மீண்டும் பெண் குழந்தையே பிறந்தது.
இதனால் மனம் வெறுத்த பாரெக் தன் மனைவியின் மூக்கை வெட்டி விட்டார். மூக்கில் ரத்தம் சொட்டச் சொட்டமருத்துவமனையில் ரஹேலா அனுமதிக்கப்பட்டுள்ளார் என தெரிவித்துள்ளது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications