ஐசிஐசிஐ-பேங்க் ஆப் மதுரை இணைப்பு

Subscribe to Oneindia Tamil

மும்பை:

ஐசிஐசிஐ வங்கியும் பேங்க் ஆஃப் மதுரையும் ஒன்றாக இணைகின்றன.

ஐசிஐசிஐ வங்கியின் இயக்குனர்கள் கூட்டம் மும்பையிலும், பேங்க் ஆஃப் மதுரை இயக்குநர்கள் கூட்டம் சென்னையிலும் திங்கள்கிழமை தனித்தனியாகநடந்தன. இந்தக் கூட்டத்தில் இரு தனியார் வங்கிகளும் அடுத்த ஆண்டு துவக்கம் முதல் ஒன்றாக இணைந்து செயல்படுவதென முடிவெடுக்கப்பட்டது.

2001-ம் ஆண்டு பிப்ரவரி 1-ம் தேதி முதல் இரு வங்கிகளும் இணைந்து செயலாற்றத் தொடங்கும்.

இரு வங்கிகளும் இணைவதற்கு இந்த வங்கிகளின் பங்குதாரர்களும், ரிசர்வ் வங்கியும் ஒப்புதல் வழங்க வேண்டும். பங்குதாரர்கள் கூட்டம் அடுத்த ஆண்டுஜனவரி மாதம் 19-ம் தேதி நடக்கிறது.

இரு வங்கிகளும் இணையும் விஷயத்தில் பேங்க் ஆஃப் மதுரையின் நிதி நிறுவன ஆலோசகரகாக மேஜர் மெரில் லின்ச் இருப்பார்.

கோடாக் மகேந்திரா காபிடல் நிறுவனம் ஐசிஐசிஐ வங்கிக்கு ஆலோசகர்களாக செயல்படுவார்கள் என ஐசிஐசிஐ வங்கியின் அதிகாரிகள்தெரிவிக்கின்றனர்.

பேங்க் ஆஃப் மதுரையின் தவைலர் தியாகாரஜன் தெரிவிக்கையில். நிதிநிலையிலும், தொழில் நுட்பத்திலும் பெயர் பெற்றுள்ள ஐசிஐசிஐ போன்ற வங்கிகளுடன்இணைவது பங்குதாரர்களுக்கு லாபமாக அமையும்.

மேலும் இங்கு பணிபுரியும் பணியாளர்களின் வளர்ச்சிக்கும், வங்கி செயல்பாடுகளில் சிறந்த நவீன தொழில் நுட்பங்கள் குறித்து அறிந்து கொள்ளவும் உதவும்.இது வாடிக்கையாளர்களுக்கு நன்கு சேவை செய்ய ஏதுவாக இருக்கும் என தெரிவித்தார்.

ஐ.ஏ.என்.எஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+