தாய்லாந்திலும் இந்தியர்களுக்கு எதிரி இந்தியர்தான்
பாங்காக்:
கல்கத்தாவிலிருந்து, பாங்காக் சர்வதேச விமான நிலையத்திற்கு வரும் இந்திய வியாபாரிகளை இனம் கண்டறிந்து அவர்களிடமிருந்து பணம்பறிக்கும்கும்பலைப் தாய்லாந்து போலீஸார் மடக்கிப் பிடித்தனர்.
கைது செய்யப்பட்ட அவர்கள் அனைவரும் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து தாய்லாந்தில் வெளியாகும் பத்திரிக்கை ஒன்றில் பிரசுரமாகியுள்ள செய்தி:
கல்கத்தாவிலிருந்து வரும் வியாபாரிகளின் உடமைகளை இந்தக் கும்பல் அவர்களை நிறுத்தி வைத்து வாங்கிக் கொள்ளும்.
பின்னர் அவர்களிடமிருந்து உடமைகளின் அளவுக்குத் தகுந்தவாறு அதாவது ஒரு கிலோகிராமுக்கு இவ்வளவு என்று பணம் வசூலித்துக் கொள்ளும். இதில்வசூலின் ஒரு பகுதி தாய் விமானநிலையப் போலீஸாருக்குக் கொடுத்து விடுவார்கள்.
இதனால் பாதிக்கப்பட்ட இந்திய வியாபாரிகள் தாய் போலீஸ் நிலையத்தை அணுகினால் அவர்களது புகார்களை கண்டு கொள்ளவதேயில்லை தாய்விமானநிலையப் போலீஸார். ஏனெனில் இந்த பண வசூல் வேட்டையில் அவர்களுக்கும் பங்குள்ளது. இது தொடர்பாக இரண்டு பேரைப் போலீஸார்திங்கள்கிழமை கைது செய்துள்ளனர். அவர்கள் பெயர் பிரதீப் குமார், ஸ்ரீகானித் பான்ட்லே.
பான்ட்லே பாபி கெஸ்ட் ஹவுசில், இந்தியர்களின் உடமைகளுடன் கைது செய்யப்பட்டார். தாய்லாந்து சர்வதேச விமான நிலையத்தில் இருக்கும் இந்தக் கும்பல்இந்தியர்களைக் குறிவைத்து அவர்களது, உடமைகளை வலுக்கட்டாயமாக வாங்கி வைத்துக் கொள்ளும். பின்னர் அவர்களிடமிருந்து ஒரு கிலோ கிராமுக்குஒரு டாலர் என்ற வகையில் பண வசூல் செய்த பின்தான் உடமைகளைத் திருப்பிப் கொடுக்கும்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications