ஆஸ்திரேலியாவில் 167 பேர் கடலில் மூழ்கினர்
கான்பெரா:
இந்தோனேசியாவிலிருந்து, ஆஸ்திரேலியாவுக்கு வந்த படகு கடலில் கவிழ்ந்ததில் 167 பேர் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுவதாக ஆஸ்திரேலியகுடியேற்றத் துறை அமைச்சர் பிலிப் ரூடாக் புதன்கிழமை தெரிவித்தார்.
ஆஸ்திரேலிய அமைச்சர் ரூடாக் இது குறித்து கூறுகையில், இந்தோனேசியாவிலிருந்து, ஆஸ்திரேலியாவின் வடகிழக்குப் பகுதியான அஷ்மோர் தீவுகளைநோக்கி படகு வந்து கொண்டிருந்த ஒரு படகு கடலில் மூழ்கியது. இதில் 87 பேர் இருந்தனர். மோசமான வானிலை காரணமாக கடல் கொந்தளிப்பாகஇருந்ததால் படகு கவிழ்ந்ததாகத் தெரிகிறது.
மேலும் விபத்துக்குள்ளான படகைப் பின்தொடர்ந்து வந்து கொண்டிருந்த இன்னொரு படகும் காணவில்லை. அது குறித்த எந்த விவரமும் இதுவரைதெரியவில்லை. அந்தப் படகில் 80 க்கும் மேற்பட்டோர் இருந்ததாகக் கூறப்படுகிறது. அவர்களும் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
படகில் வந்தவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று தெரியவில்லை. அவர்களில் பெரும்பாலானவர்கள் அனுமதியில்லாமல் வேறு நாட்டுக்குப்குடிபெயர்பவர்களாக இருக்கலாம். மேலும் அவர்கள் அனைவரும் இந்தினோசியா வழியாக ஆஸ்திரேலியா நோக்கி வந்தவர்களாகவும் இருக்கலாம்.
விபத்துக்குள்ளான படகுகள் இந்தோனேசியாவிலிருந்து கடந்த வாரம் கிளம்பிச் சென்றிருக்கலாம் என்றும், அது மூன்று நாட்களில் ஆஸ்திரேலியாவில்உள்ள ஆஷ்மோர் தீவை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இதே போல் கடந்த ஏப்ரல் மாதம் மோசமான வானிலை காரணமாக இந்தோனேசியா மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளுக்கிடையே 250 க்கும்மேற்பட்டோர் 3 படகுகள் கவிழ்ந்ததில் உயிரிழந்தனர். இவர்கள் அனைவரும் அனுமதியின்றி ஆஸ்திரேலியா நோக்கி வந்து கொண்டிருந்தனர்.
இந்த ஆண்டில் ஜூன் மாதம் மட்டும் 4,000 பேர் அனுமதியின்றி ஆஸ்திரேலியாவுக்கு படகு மூலம் வந்துள்ளனர் என்றார்.












Click it and Unblock the Notifications