ஐ.சி.பி.எம். ஏவுகணை: வெற்றிகரமாக பரிசோதித்தது சீனா
வாஷிங்டன்:
கண்டம் விட்டு கண்டம் பாயும் டி.எஃப் 31 என்ற ஏவுகணையை சீனா கடந்த மாதம் வெற்றிகரமாகப் பரிசோதனை செய்துள்ளதாக அமெரிக்காகூறியுள்ளது.
1980 ம் ஆண்டு முதல் தயாரிக்கத் தொடங்கிய இந்த ஏவுகணை மூலம் இன்னும் பல பரிசோதனைகளை செய்ய சீனா திட்டமிட்டுள்ளதாகவும் அமெரிக்கஅதிகாரிகள் தெரிவித்தனர்.
அமெரிக்க செய்தித் தொடர்பாளர் பகோன் இது குறித்துக் கூறுகையில், சீனாவில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை வெற்றிகரமாகப்பரிசோதனை செய்யப்பட்டது.
அமெரிக்க ராணுவ ஜெனரல் ஹென்றி ஷெல்ட்டன், கடந்த நவம்பர் மாதம் 1 ம் தேதி சீனாவுக்குச் சென்றிருந்த போது, டி.எஃப் 31 என்ற இந்தஏவுகணை சோதனை செய்யப்பட்டது.
மேலும் 1999 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதமும் ஒரு ஏவுகணைப் பரிசோதனையைை சீனா மேற்கொண்டது. இந்த வருடம் மட்டும் சீனா இரண்டு ஏவுகணைப்பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளது. தற்போது சீனா மேற்கொண்டுள்ள பரிசோதனை மூன்றாவது பரிசோதனையாகும். இந்த ஏவுகணைஎதிர்பார்த்ததை விட நல்ல முறையில் இயங்கியது என்றார்.
இதற்கிடையே, வாஷிங்டன் போஸ்ட் பத்திரிக்கையில், சீனா அடுத்த சில வாரங்களில், அடுத்த ஏவுகணை பரிசோதனை செய்வதற்கு தயாராகிக்கொண்டிருக்கிறது என்று செய்திகள் வெளியாகியுள்ளன.












Click it and Unblock the Notifications