புலிகளைத் தடை செய்யுங்கள் .. கோருகிறது இலங்கை
கொழும்பு:
சர்வ தேச நாடுகள் அனைத்தும் விடுதலைப் புலிகள் அமைப்பை தீவிரவாதஅமைப்பாக அறிவிக்க வேண்டுமென இலங்கை அரசு வலியுறுத்தியுள்ளது.
பிரிட்டன் உள்ளிட்ட சர்வதேச நாடுகள் விடுதலைப் புலிகள் அமைப்பை தீவிரவாதஇயக்கம் என அறிவிக்க வேண்டும். அந்த இயக்கங்கள் நிதி வசூல் செய்வதற்கும் தடைசெய்ய வேண்டும் என இலங்கை அரசு வலியுறுத்தி வருகிறது.
இது பற்றி இலங்கை அரசின் உயர் அதிகாரிகள் தெரிவித்திருப்பதாவது:
விடுதலைப்புலிகள் அமைப்பிற்கென பலர் லண்டனில் நிதி திரட்டி வருகிறார்கள்.அங்கே தலைமைச் செயலகம் அமைத்து விடுதலைப்புலிகள் சுதந்திரமாக செயல்பட்டுவருகின்றனர்.
பிரிட்டனில் விடுதலைப்புலிகள் அமைப்பிற்கு தடை விதிக்க வேண்டுமென்றுஇலங்கை அரசு வலியுறுத்தியுள்ளது. பிரிட்டனைத் தவிர மற்ற சர்வதேச நாடுகளும்தீவிரவாத அமைப்பான விடுதலைப்புலிகள் அமைப்பிற்கு தடை விதிக்க வேண்டும்.
40க்கும் அதிகமான நாடுகளில் விடுதலைப்புலிகள் செயல்பட்டு வருகிறார்கள்.இந்தியாவிலும் அமெரிக்காவிலும் விடுதலைப்புலிகள் அமைப்பிற்கு ஏற்கனவே தடைவிதிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது இலங்கையில் விடுதலைப்புலிகள் மீது விதிக்கப்பட்டுள்ள தடைகள்நீக்கப்பட்டால்தான் அமைதிப் பேச்சுவார்த்தையில் பங்கு பெறுவோம் என லண்டனில்இருக்கும் புலிகளின் ஆலோசகர் ஆன்டன் பாலசிங்கம் கூறியுள்ளார்.
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டதற்கு முக்கியகுற்றவாளியாக கூறப்பட்ட விடுதலைப்புலிளின தலைவர் பிரபாகரனை இந்தியாவிடம்ஒப்படைக்க வேண்டும் என இலங்கைக்கு இந்சியா கோரிக்கை விடுத்திருந்தது.
இந்நிலையில் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனை தேடி வருவதாக சர்வதேசபோலீஸ் அமைப்பு இன்டர்போல் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது.