For Daily Alerts
Just In
தலித்களுக்காக குரல் கொடுக்கிறார் மூப்பனார்
சென்னை:
தலித் மக்களுக்காகக் குரல் கொடுப்பேன் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் மூப்பனார் தெரிவித்தார்.
தமிழ் மாநில காங்கிரஸ் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் பிரிவு சார்பில் மாநில மாநாடு சென்னை தேனாம்பேட்டை காமராஜர் திடலில் நடந்தது.
மாநாட்டில் கலந்து கொண்ட மூப்பனார் பேசியதாவது:
அடுத்த தேர்தலில் எந்தப் பாதையில் நிற்க வேண்டும் என்பதைக் காட்டுவதற்காகத்தான் இந்த மாநாடு. மக்களை ஏமாற்றி ஓட்டுவாங்குவதற்காக அல்ல.
ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்ற கொள்கை தலித் மக்களை முன்னேறச் செய்வதற்காகத்தான்.
நாம் ஆட்சிக்கு வருகிறோமோ இல்லையோ, ஆனால் தலித் மக்களுக்காகவும், அவர்களது பிரச்சனைகளுக்காகவும் குரல் கொடுப்பது தான்எங்களது கடமை. தலித் மக்களோடு என் இறுதி மூச்சு இருக்கும் வரை உறுதுணையாக இருப்பேன் என்றார் மூப்பனார்.
Comments
Story first published: Wednesday, December 13, 2000, 5:30 [IST]