"தகவல் தொழில்நுட்பம் மட்டும் முன்னேற்றத்திற்குப் போதாது
கோவை:
தகவல் தொழில் நுட்பத்தில் மட்டும் கவனம் செலுத்தினால் நாடு முன்னேறாது. மற்ற தொழில் நுட்பங்களிலும்கவனம் செலுத்த வேண்டும் என மாணவர்களுக்கு பல்கலைக் கழக மானியக் குழுவின் (யூ.ஜி.சி) தலைவர் ஹரிகவுதம் தெரிவித்தார்.
கோவை அவிநாசிலிங்கம் பல்கலைக் கழகத்தின் 12வது பட்டமளிப்பு விழா நடந்தது. இந்த விழாவில் சிறப்புவிருந்தினராக பல்கலைக் கழக மானியக் குழுவின் தலைவர் ஹரி கவுதம் கலந்து கொண்டார். இவருக்கு பல்கலைக்கழக வேந்தர் ராஜம்மாள் தேவதாஸ் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கினார்.
பட்டமளிப்பு விழாவில் பல்கலைக் கழக மானியக் குழுவின் தலைவர் ஹரி கவுதம் பேசியதாவது:
இப்போதெல்லாம் தகவல் தொழில்நுட்பக் கல்விக்குத் தான் மாணவர்களும் பெற்றோர்களும் அதிக முக்கியத்துவம்கொடுத்து வருகின்றனர். தகவல் தொழில்நுட்பக் கல்விக்கு அரசும் அதிக முக்கியத்துவம் தருகிறது.
ஆனால், தகவல் தொழில்நுட்ப அறிவு மட்டுமே ஒரு நாட்டின் வளர்ச்சிக்கும், நவீன உலகின் வெற்றிக்கும்அடிப்படையாக இருந்து விட முடியாது. இதனால் ஒரு நாடு வேகமாக முன்னேறி விட முடியாது. அறிவை தகவல்தொழில்நுட்பத்துடன் சமன்படுத்த வேண்டும். மற்ற துறைகளும் இந்த தகவல்தொழில் நுட்பத்திற்கு இணையாகச்சென்றாக வேண்டும்.
பள்ளிகளிலும் சரி, கல்லூரி, பல்கலைக் கழகங்களிலும் சரி, ஆசிரியர்களின் மதிப்பு மாணவர்கள் மத்தியிலும்,சமுதாயத்திலும் குறைந்து கொண்டே இருக்கிறது.
பொது மக்களிடையே ஆசிரியர்களுக்கு இருந்து வந்த மதிப்பு மாறி வருகிறது. இதனால் கல்வித் தரம் குறைந்துவருகிறது. இது ஒட்டு மொத்தமாக நாட்டின் கல்வித் தரத்தை சீரழிப்பதாக மாறி விடக் கூடாது.
கல்லூரி ஆசிரியர்கள் தகுதி அடிப்படையில் தேர்வு செய்யப்பட வேண்டும். பல்கலைக் கழக ஆசிரியர்கள் வேலைகுறைவு, சம்பளம் அதிகம் என்ற எண்ணத்திலேயே செயல்பட்டு வருகின்றனர். கற்பிப்பதில் ஆர்வமோ, ஆய்வோமேற் கொள்ளப்படுவதில்லை என்றார்.
இந்தப் பட்டமளிப்பு விழாவில் பல்கலைக் கழகத்தின் துணை வேந்தர் சந்திராமணி அறிக்கை வாசித்தார்.முதுகலைப் பட்டமாக 18 மாணவிகளும், இளங்கலையில் 29 மாணவிகளும், இன்ஜினியரிங் பட்டப்படிப்பில் 4மாணவிகளும் பதக்கங்களைப் பெற்றனர்.












Click it and Unblock the Notifications