For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கோபாலை விசாரிக்க பெங்களூர் கோர்ட் உத்தரவு

By Staff
Google Oneindia Tamil News

பெங்களூர்:

நடிகர் ராஜ்குமார் கடத்தப்பட்டு மீட்கப்பட்ட விவகாரத்தில் நக்கீரன் கோபால் பங்கு பற்றி போலீஸ் விசாரணை செய்யவேண்டுமென பெங்களூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கன்னட நடிகர் ராஜ்குமார் வீரப்பனால் கடத்தபபட்டு 108 நாட்கள் கழித்து விடுதலை செய்யப்பட்டார். ராஜ்குமாரை விடுவிக்கஅரசு தூதராக நக்கீரன் கோபால் செயல்பட்டார்.

தற்போது பெங்களூரைச் சேர்ந்த வயிற்றுக் கட்சி ராமசாமி நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவை ஏறறுக்கொண்ட நீதிமன்றம்,ராஜ்குமார் மீட்கப்பட்ட விவகாரத்தில் கோபாலின் பஙகு பற்றி விசாரிக்க உத்தரவிட்டுள்ளது.

ரங்கசாமி தாக்கல் செய்துள்ள மனுவில்ராஜ்குமாரை மீட்க நக்கீரன் கோபால் 5 முறை காட்டுக்கு சென்று வந்தார். அப்போதுஅங்கிருந்த தேசவிரோத சக்திகளுடன் அவர் தொடர்பு கொண்டிருந்தார். அவர்களுடன் என்ன பேசினார் என்பது தெரியவில்லை.

இந்த சம்பவத்தில் கோடிக்கணக்கான பண பேரம் நடந்துள்ளதாக தெரிகிறது. நாகப்பா வீரப்பனிடமிருந்து காட்டிலிருந்து தப்பிவந்தார். கோவிந்தராஜ் உடல் நிலை பாதிக்கப்பட்டதால் விடுவிக்கப்பட்டார் என கூறப்பட்டது. ஆனால் உண்மை என்ன என்பதுதெரியவில்லை. இதில் நடந்த உண்மைகள் என்ன என்பது தெரிய உத்தரவிட வேண்டும். இதற்கான விசாரணைக்குஉத்தரவிடவேண்டும்.

இந்த சம்பவம் தொடர்பாக ராஜ்குமார் மகன்கள் சிவராஜ்குமார், புனித் ராஜ்குமார், மருமகன் கோவிந்தராஜ் ஆகியோரிடமும்விசாரணை நடத்தப்பட வேண்டும் என கேட்டுக் கொண்டிருந்தார்.

மனுவை ஏற்று மாஜிஸ்திரேட்டு பட்டீல் விசாரணை செய்ய உத்தரவிட்டார். நக்கீரன் கோபால் மற்றும் 3 பேர் மீதுள்ள புகாரைசதாசிவ நகர் போலீஸ் போலீஸ் இன்ஸ்பெக்டர் விசாரணை செய்ய வேண்டும். விசாரணை அறிக்கையை அடுத்த ஆண்டு ஜனவரி8-ம் தேதி நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X